இடுகைகள்

ஜனவரி, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அவர் தான் பெரியார்

படம்
மானமிழந்த மக்களையும் சிந்தை பொருத்தி சிரசுயர செய்த சீர்திருத்தவாதி பெரியார் ஆரிய மண்ணின் வீரியம் அறுத்து திராவிடம் காத்த தலைவர்  பெரியார் ஜாதி களங்கம் களைத்து  கலப்பு மணங்கள் அமைத்து - ஓர்யுக களம் கண்டவர்  பெரியார் சிகை நகை கண்டு மயங்கிய மகளிருக்கும் மானம் புகுத்தி பட்டபடிப்பும் அதற்கோர் பணியும் பெறுதல் நலம் என விடுதலை விதைத்தவர் பெரியார் சாஸ்திரமும் சம்பிரதாயமும் அகத்தின் ஆக்கபூர்வ சக்தியின் முட்டுக்கட்டையன மூடநம்பிக்கை முடங்க  செய்தவர் பெரியார் அகரம் அளித்த அறிவு கொண்டே அணைத்தையும் பகுத்துணர்வோம் திராவிட வழியினுடே தேசியம் காப்போம்

வாழ்வின் நோக்கம்

படம்
நாதம்  நிறைந்து வித்தாய் ஊற்றெடுக்கும் பிறப்பில் இருபத்தி மூன்றாம்   நிறப்புரி  இணைவில் ஈருடல் ஓருயிராய் தரித்து உதிரத்தை உணவாய் கொண்டே உரம் பெற்று உலகறிய வான் பறந்து கலப்பை  சுமந்தே காடு சென்று கதிர் அறுக்கும் கலைஞர்கள் நாம். களை அறுத்தலும் வினை திருத்தலும் ஞால பயனெனக் கொள்க காலம் செல்ல காதல் கொள்ளக் கலவி செய்யக் கண்கள் கொள்வோம் கருத்துடனே, உயிர் உய்ய, ஊண் கொள்ள, ஊண் சமைப்போம் உலகத்திற்கே- ஓர் கவளம் காதலுடன்

அது ஒரு மழைக்காலம்

படம்
குடை பிடித்து  குறுக்கிட்ட  குறுகிய வான் பயணங்கள்  இப்படியும் இருந்தன  வான் சுரந்த மண்  நாசி வழியே ஞானம் கண்டன  குட்டையின் தேக்கத்தில் சற்று  சேட்டைகள் மிகுந்தே இருந்தன  ஒட்டு குடிசை ஓரம்  சொட்டும் ஓசை ஓர்  சொப்பன ஸ்வரத்தை  சொல்லிச் சென்றன  தட நடையும்  தட தட ஓட்டமும் காணும்  தார் சாலைகள் இன்று -குப்பை  வேர் அகற்றி  வெறி சோடியிருந்தன  காலம் கடந்தாலும் சில  காகித கப்பல்கள் குட்டையில்  முந்திக் கொண்டு  நீந்தி இருந்தன- நீர்  சொட்டிய சொக்காய்கள்  சோலை அடியில்  சோம்பல் முறித்தன.  ஈரம் சொட்டிய  மயிர்கள் மங்கையின்  கன்னங்களை கவ்விப் பிடித்திருந்தன  மழை குடையான  நிழற்குடையிலிருந்து  நீட்டிய கைகள் சற்று  மழையைக் கட்டி பிடித்திருந்தன  கவிஞன் கண்ட  கத்தும் குயிலின்  குத்தும் இறக்கைகள்  குத்தாட்டம் போட்டே  கொஞ்சி இருந்தன  கார் மேக  கருத்தரிப்பில் சில  கவிதைகள் இப்படியும்  உயிர் கொண்டிருந்தன

மௌனம்

படம்
சோனாவின் கலை வார கொண்டாட்டத்தில் கொணர்ந்த மெளன ராகமிது  மௌனம் மோதிக் கொள்ளும் மனதின் மோட்ச நிலை இரு விழி இருண்டு காதுகள் கரைந் தோய்ந்து வாய் மொழி வழக்கொழிந்து உள்ளொளி நோக்கும் உன்னத நிலையே மெளனம் ஆகும் கோடிக்கணக்கான நினைவுகள் கொட்டி கிடக்கும் குப்பை கலவை இந்த மௌனம் ஆம் குப்பை கலவை தான் இதில் தீதும் உண்டு தீந்தமிழும் உண்டு தீந்தமிழைத் தேன் என்றும் தீச்சுடரென்றும் நன்றென்றும் கொள்பவன் நான் ஆதலால் இதில் தீதும் உண்டு தீந்தமிழும் உண்டு முட்டி மோதி திட்டி தீர்த்துக் கொட்டி கலக்கும் சமுத்திரம் இந்த மெளனம் மௌனத்தின் முற்றம் சொல்லும் செயலும் அச் சொல்லும் செயலும் நம் தீந்தமிழ்போலே இனித் திடல்  வேண்டும் தேசியம் காத்து தழைத்திடல் வேண்டும் மெளனம் கொள்வோம் தீவினை கலைத்து தீந்தமிழ் பொருத்தி தீச்சுடராய் தேசியம் காப்போம் வாழ்க பாரதம்

மரமும் மனிதனும்

படம்
மழை அரிப்பில் வந்த உயிர்ப்பே- இந்த விதையின் வேர்கள் வேர்திடாத வேர்களின் குளை கிளைகளே இந்த குச்சிகள். குச்சிகளிலும் குளர் கதிர்கள்  உண்டு அது குள்ள கதிராய் அமைவதும் உண்டு குள்ள கதிர்கள் குலை இலை காண்பதுண்டு மண் பிடிப்பால் இலை கண்ட தோட்டத்து அரசிகள் ஒரு தலையாய் இரு தலையாய் - மலரும்  காதல் கொணரும் மலராய் மலர்வதுண்டு  மலர்வதெல்லாம் கனிவதற்கே - பின் கவர்ந்து முகர்ந்து காதலாய் பசிந்து புசிந்து பின் எச்சமாய் எரிந்த பின் கொடி மரத்தின் வேரில் உயிர்பதே விதையும் விதையின் விரியமும் அமைந்தமையே அகிலத்தில்  அழகு பார் .

உழவர் திருநாள்

படம்
பழையன கழிதலும் புதியன புகுதலுமே புரட்சியன கொள்வதுண்டு  அப்புரட்சிதனை போரடித்து நெற்காத்து நேர்நிமிர்த்தி ஊண் சமைத்து உண்டு களிப்பதே உழவர் வினையாம்; கண்ட விளைச்சலிலே களை திருத்தி கதிர் அறுத்து களம் சேர்த்து இனம் காப்பான் காவலாளி-ஆம் ,அவன் மானிட இனத்தின் காவலாளிதான் பசிப்பிணி போக்கி பார் காக்கும்  பண்டத்தின் படைப்பாளியை பறையடித்துக் பொங்கலிட்டு பொற்றிடுவோம் தமிழினத்தை காத்திடுவோம்

மண் வாசனை

படம்
கருத்த வானத்தால் இடிந்த மேகங்கள் மழைதுளிகள் துள்ளி  திரிந்த துளியின் துளையிட்டு நிலைதான் மண்வாசனை மாரியின் மண் தழுவல் மனமெல்லாம் மகிழ்வுட்டும் மனக்கோலத்தின் ஆதியெல்லாம் மண்வாசனையே  உரித்து ஊரி செரிந்து சேரியாய் செழிக்கும் திடத்தின்  வாயுவாய் அமந்தமையே மழை கொள்ள துளிகள்,உலர் துணிகள் சாரல்-மூக்காடும் சாக்கடைகள் என பலவான போதிலும் மழை  மனம் கொள்வது மண்வாசனையில்தான் ஒலி கெட்டு போனலும்  ஒளி கெட்டு போனலும் ஓங்கி நிற்பது முகர் தரும் வசனைதான் ஆழி சூழ் உலகின் அடிநாதமாய் விலங்கும் மூச்சிலே முடிந்திருக்கும் மண்வாசனை ஆழிக்கும் அறிவூட்டும் அழகு பார்

காதல்

படம்
தமிழனும் தமிழச்சியும் தழைத்தோங்க குலம்காத்து தவபுதல்வர்கள் தமையீன்று தரணி எல்லாம் தனம் சேர்க்க தெள்ளியதோர் சிந்தை பொருத்தி தமிழர் பால் காதல் கொள்வோம்; காதல் காலம் கழியா  காலபெட்டகம் என கூடி முழங்கிடுவோம், காதல் கருத்தியல் கொணரும்  கட்டட்ற மேதா விலாச மூலை மடிப்பில் மையம் கொள்ளும் மயக்கம்தான் என இறுமாப்புரைப்போம், மங்கா ஒளியுடன் மகிழ்ந்திருப்போம்.

பெண்

படம்
பேரிருளின் பிளப்பாய்  பேதையாய் பிறப்பெடுத்து உரம் பெற்று உதிரம் போக்கி உரு மாறி பெதும்பையாய்  போற்றுவித்து மலர்சூடும் மங்கையாய் மனமுவந்து மணமுடித்து மழலைபெற்று மாண்புயர்த்தி மகுடம் தறிக்க மடந்தையாய் மனமேற்றி மாநெறி காத்து ஆழி சூழ் அண்டத்தின் அறிவை அரிவையாய் தெரிவையாய் உணர்ந்தமையால் பேரிளம்  பெண்மையை அடைந்தே பெருங்களிப்படைபவள் நீ.....

மகள்

படம்
பாரதம் பேண ஒரு பாரதி வேணும் கலியுகத்தின் கவுச்சி நீங்க ஒரு கன்னியாய் வேணும் சொப்பில் சோம்பல் முறிக்கும் சுகம் துறந்து சூத்திரத்தின் சூழ்ச்சி அவிழ்க்கும் சுறுசுறுப்பு வேணும் அது சிறு பூவாய்யும் வேணும் அவள் கீர்த்தி பெற அவளின் கீழாய் கீழாய் நான் நானாய் கொஞ்சம் அவளாய் அவளின் மழலை கடலில் நீந்தி என் முத்தை நான் முந்தியெடுக்க வேணும் அன்னம் சிதறி உண்ண மறுக்கும் அவள் அன்ன நடைக்கு என் நடை இணை செய்யணும் அன்ன சாலைகளும் அண்ணா சாலைகளும் கடந்து அவள் அனைவர் பட்டம் பெற வேண்டும் அது முனைவரிலும் பண்பட்டது என் கைவிரிப்பில் அவள் உலகடைக்க வேணும் அவள் உலகடைப்பில்  நான் கைவிரிக்க இயலாது மகாகவி கடலில் மாண்புற நீந்தி கடந்தவள் கண்களில் கானல் அனல் கொப்பளிக்கும் தேடல்கள் வேண்டாம் - அவை தேவதையிலும் தென்படும் காலம் மிகுந்தால் கானல் காலனாய் மாறும் சுட்டெரிக்கும் தீ - என் சுட்டெரிக்கும்  தீ  என்றும் சுடர் தரும் தன் சுற்றத்திற்கும் சுகம் பெற நலம் வாழ

காவிரி

படம்
விரிந்து செல்லும் காவிரி காவென செய்ய ஆவண செய்தல் வேண்டும் அனைத்துலகியர் பால் அன்பு கொண்டு அமுது சமைக்க நீர் பார்முழுதும் பரந்தோட வேண்டும் நிலப்பரப்பை வளப்படுத்த கொண்ட கோடெனவே கொள்கை கொண்டு அன்பிற்கில்லை அடைகுந்தாழ் கோடுகள் என அமுது சமைக்க- ஓர் பட்சணம் பகிர்தல் வேணும்-அது பாரபட்சம் பாராத்திருத்தல் வேணும் பால்வெளியில் பறந்தோட பல உலகு நமகில்லை- நம் பார் சிறக்க காதல் செய்ய -ஓர் கவளம் நீர் வேண்டும் - இல்லையேல் குவளை கண்ணீரே மிஞ்சும் நீருக்கு சொரிந்த கண்ணீர் என்பது திராவிட இழுக்கு நீருக்கு இல்லை எல்லையென  நிலை கொண்டிருப்போம்  திராவிடம் வழி தேசியம் காப்போம்

மாலை மங்கும் நேரம்

படம்
வானம் வழி கொடுக்க வளைந்து விட்டது கானல் காக்க கொள்ளாமல் வெப்பம் கக்கும் கதிரவன் கரைகிறது மகிழ்ந்து மலைக்கும் மலை பின் மறைகிறது; வானச்சட்டியில் மேக அப்பளம் பொரித்தது யாரோ ? அதோ அந்த கரையும் கதிரவன்தான் பொரித்து சிவந்த அப்பளங்களை வானம் எல்லாம் அப்பிவிட்டு அணைகிறான் ஆதவன் மறைகிறான் மாதவன் மறைந்ததால் மங்கியோன் மிளிர்கிறான் லேசாய்; லேசாய் தான்; மாதத்தில் எல்லா நாளும் பௌர்ணமிதான்   அச்சிறு வேளையில், மறைத்த மாதவன் விலகி செல்கையில்; மறைந்த பிறையோன் பிளந்து வருகையில் சிறு மணித்துளிகள் மாதமெல்லாம் பௌர்ணமிதான் கதிரவன் கரையும் காலங்கள் எல்லாம் கடற்கரை சாலையில் காதலர் கவிபாடும் காலங்கள் ஆகும் ; கவிபாடும் காதலுக்கு கருமையின் இருள்போக்க உவமைக்கு உயிர் தர உலகில் உதிக்கிறான் மாதவன் மதியாய் – மேகம் மாக்கோலமிட்ட வானத்தின் வெண்ணிற வண்ணமாய்; வெள்ளி கிண்ணத்தில் வெண்சோற்றில் நெய்யூற்றி வேந்தனை மடியேந்தி மதி பார்த்து மகிழ்வூட்ட-பல குணவதிகள் வான் கொட்ட விளிக்கிறார்கள் அவர்தம் மழலையுடன

பணி

படம்
மாநகரை மணமணக்க மாபணிகள் செய்போரை கண நேரத்திலும் கண்டுகொண்டதுண்டோ? அகத்தே அழகுற அழுகு பொருள் அண்டாது, அவை அகற்றும் நேரத்தில் அவற்றை ஆதாரமாய் அமைந்திங்கு வாழ்ந்து வரும்  அவலங்கள் களைத்திட  தலைத்திடுத்தல் உண்டோ? சாக்கடைகள் கடக்கையிலே சனம் சலிக்கும் முகமெல்லாம் -அதை சார்ந்தே சாவோனின் நிலை கலைத்தல் உண்டோ? குடல் இறக்கும் குப்பைகளை கை கூட்டி வாரி அள்ளும் அவலத்தை சாந்திராயன் காலத்திலும் சனம் செய்தே செத்து மடிகின்றன என் சிந்தையில் உதித்தமட்டில் ஏனையோர் தொழில்களிலே தினம் ஏளனமாக்கும் துப்புரவே ஏவுகணை செய்வதிலும் ஏற்றம் கொண்டு நிற்கிறது மறுதலிக்கும் நீதிகள் மனித இனத்தின் சபாக்கெடுகள் துப்புரவுடனும் நல்லுறவு கொண்டிங்கு-அவர் பால் நலம் செய்தல் வேண்டும்

சந்தை

படம்
தொழிற்சாலையில் தொடுக்கப்பட்ட தோரணத்தின்  தொடுபொருள் காட்சிதான் சந்தை வணிகம் முகநாசி நுகர்தலையும் ஒலி ஒளி பகிர்தலையும் பண்படுத்தும் பேரமைப்பு-இப் பண்டைமாற்று வணிக சந்தை விளித்தலையும் ஒளித்தலையும் கழித்தலையும் காத்தலையும் ஒருங்கிணைக்கும் ஒய்யாரம் இவ் ஓர் கூட்டு வியாபாரம் சுண்ணாம்பு சுவர்களிலும் பளிச்சிட்ட பாதுகைகளிலும் பளபளக்கும் ஒளிசித்திரம் நுகர் சேர்க்கும் நுண்ணறிவு தொலைதூர தொடர்பினிலும் தொலைகாட்சி தோன்றலிலும் மனம் கவரும் மாயாஜாலம் -இம் மாசந்தை மைதானம் வசன வடிவமைப்பில் சனம் சேர்க்கும் சரணாலயம் சந்தை படுத்தும் சாதுர்யம் மாற்று வழி மாந்திரிகம் சந்தை மாற்றும் மந்திர மார்கம் சரித்திரம் படைக்கும் சந்தைப்படுத்தல் சாமானிய சேவைக்கு செய்தி தொடர்பே

கிராமம் மறந்த மாயமென்ன ?

படம்
சரிநிகர் சமமென கொண்ட  மகேசனே தொழுதே மாதர் மேன்மையை மெச்ச மறந்தனர் மரபாச்சி பொம்மையை மடியில் கிடத்தினால் மாதர் அறிவோ மதிகெட்டான் சாலை இத்தகு இன்னல் இனி இங்கு இல்லையென இனம் கூடி குலவியது அங்கும் இங்கும் ஞாலம் அதிர ஞானம் உரைத்த எம் ஞான மாதர் கிராமம் மறந்த மாயமென்ன?

சமத்துவம்

படம்
விலங்குகளின் விந்தை வினையில் சந்ததி சேர்த்தது இச் சாமானிய கூட்டம்; சோறும் நீரும் சார்பற்றே சமனம் கண்டது செம்மொழி மண்ணில் அகிலம் போற்றும் அழகன்றோ தமிழ்? - ஆதலால் அறியா காதலாய் கலந்தது ஆரியம்  குமரி மண்ணில் -சாதி கலந்தது- நம்முள் குலைந்தது - நம்மை பிளந்தது; குடியாதவனை  குலம் சேர்க்காமல் குலை சாய்தால் கூடுதல் உண்டோ இம்மானிடத்தே இல்லை-நம் ஆதி தமிழன் சாதி கண்டதில்லை; மதி கொண்ட மைய்யலும் மகவும் கொண்ட வீரமும் -எம் மாமொழியின் மாண்புகள் அன்றி வேறில்லை ஆக,ஆரியர் காலத்து சாதிக்கும் சற்று காலங்கள் கண்டதென காடு கடத்துவோம் ஓர் வையக காதலுடன்; ஜென்மங்கள் பல கண்ட ஜாதிக்கு ஜனம் சேர்ந்து இனியேனும் முக்தி தரல் நம் வரவிற்கு தளர்வு; குமரி கண்டத்து குலைகள் தழைக்க ஆவண கொலைகள் அண்டாது அரண் அமைப்போம்; சாதி மரங்கள் சரித்து   ஓர் சமத்துவத்தில் தழைப்போம் அங்கே இச் சுவடுகள் காணாது காதலுடன்....

சுதந்திரம் ஒரு பார்வை

படம்
சுதந்திர காற்றில் சுவாசமாய் ஒரு கீதம் ஆண்டு பல அலைகழிந்து கொண்டிருக்கிறன; ஆயினும் அகப்படாது போனவை ஆயிரம் -அவற்றின் பாயிரத்தை பகுத்தாய்ந்து  பண்படுத்த சில இங்கே மண் சொறியும் மழலை மழை நினைக்கும் பேதை கோதை கேணி கேட்ட கேரளத்து ஸ்வரங்கள் மனம் கொள்ளும் மண் புழுதி மகுடம் தரித்த மாமொழி இலக்கணம் சாதியரும் ஞானியராய் சமைதிட்ட சமத்துவம் கதிரவன்  காணாது  போனபின்னும் எம் வீர மங்கையரின் வீதி உலாக்கள் தம்மவரை  தாமே தமதாக்கும் தளர்வு மறுவீடு கண்டபோதும் சப்த மணிவரை ஒரு நிசப்தம் அறுவடைத்த அறிஞர்களே வணிக விலை வகுக்கும் களிப்பு குடியரசின் குண பிறழ்வில் கனம் கொள்ளா அறிவின்  சினம் காலகூத்தால் இவை கை சேராது போயினும் -என் கவிதையிலேனும் நான் காட்டு தீ வளர்ப்பேன் கடமை கொண்டே

ஆண் பெண் நட்பு

படம்
பதின் தாண்டி முதிர் கொண்ட காலத்தில் முந்துதல் இன்றி  நட்பே மூட்பென அன்பே அகமென  கருத்தியல் கொண்டே  கருத்தரிகின்றன-இக் கை கோர்ப்புகள்; மாண்பு மொழியே  மாலை வரை  மனம்  கொண்டபோதிலும்  சினேக  மொழியே சிரிப்பில் சேர்த்து சித்திரம் எடுக்கிறது; கோதிடும் தலையும்  இணைந்திடும் விரலும் – மன  இன்னல்கள் தீர்த்தே  இனிமை சேர்க்கும் அவ்வளவே ; பாலினம் மறந்து  பல கதைகள் பேசி பண்டங்கள் பகிர்ந்தே  பகல் தேய்கிறது ; எதிர் பாலின நட்பை எதிர் கொண்டோர்க்கெல்லாம்  புதிர் தந்தே போகிறது  சில கள்ளசிரிப்புகள்; புதிர் கண்ட நட்புகள்  புறத்தே பல புரிதலும் கண்டு  புன்முறுவல் பூத்தே  புனர் ஜென்மம் காண  மனம் கொள்கிறது; பெண்ணின்  ஆண்மையும் ஆணின் பெண்மையும் அன்பில் அறிந்திட  நட்பே வித்து ; காலங்கள் கடந்தாலும்  கல்யாணம் முடிந்தாலும் – தம் மழலை விளித்தலில் விண்ணேற்றம் காண்கிறது  சில வியத்தகு நட்புகள்.......

மழலை

படம்
மழலைகள் மலைக்கணக்கில் மண் சேர்ந்து வருகிறார்கள் மண்ணும் மனம் சோராது மணம் தந்தே கனம் கொண்டு, வானும் அஃதே; இங்கு இன்னல்கள் யாவும் இடைதரகரிடத்தே பொக்கை வாய் குழந்தையிடம்  பொற்தமிழ் பொருத்தும்  விந்தை மானுடர்கள்  மண்தவளும் முன்னே  மழலை கல்வி  மாண்பின்றி மக்களிடத்தில்; மண் அணைத்து,  மனம் அமைத்து,  மணம் முகர்ந்து, மகிழ்வுற இன்று  மணித்துளிகள் இல்லை,  மாறாய்.,  மார்த்தாண்டன் தோன்றும் முன்னே  மறைகிறார்கள் மனைவிடுத்து  உறைகிறார்கள் ஊர்தி பார்த்து  உணவோ  உந்துதலற்ற ரொட்டி துண்டில், அழுகையும் ஆர்பரிப்பும்  அலாதி இங்கே, அது கிடக்கட்டும்  இந்த முதல்நிலை  முனைவர்களுக்குதான்  எத்துணை பெருமை? ஆம், அவர்கள்  முதல் நிலை  முகர்வதாலேயே   முனைவர்கள்தான்; மனம் இனிக்கும் அகரம்முதல்  தனம் சேர்க்கும் (a)எகரம்  வரை  குலை தழைக்க  விதையிடும் வீரியர்கள் -எனினும்  விசித்திர வினையாற்றலில்  விதிவிலக்கல்ல  இவர்களும் இன்று;  வான்பார்த்து மண் சுற்றிதிரியும் பொழுதுகள் களவாடி  வீட்டுபாடம், ஒட்டுதல், வெட்டுதல்,  கோலமிடுதல்,  குன்

மழவர் நாடு

மகவென வந்த மழவர் நாட்டின் மாண்புனரும் நேரமிது முக்கனி முதலாம் மாங்கனி அமைத்தே மழவளம் உரைக்கும் மழவர் நாடு எஃகும் , அனல் கக்கும், பணிமலை ஒக்கும் தமிழ் பணியே தலையென கொண்ட ஒளவை தனை  தந்தமையே தகைமை இங்கே வீர ஊற்றாய் தீரன் தீட்டிய திட பூமி ஒளி பேழை கூடாரத்தின் ஒய்யார சிங்காரம் மாடர்ன் தியேட்டர்ஸ் கண் குளிரும் பூந்தோட்டம் மெய்சிலிர்க்கும்  காற்றோட்டம் எற்காட்டின் ஏரோட்டம்  நாடெல்லாம் தேடி வரும் மேடெல்லாம் ஓடி வரும் மேட்டூர் அணை பாய்ச்சல்  மெருகேற்றம் ஊற்று மலை நீரோட்டம் கஞ்சமலை காற்றோட்டம் மக்கள் மலை தேரோட்டம் பாரெல்லாம் பளபளக்கும் - லீ பஜாரில் பவனி வரும் அணிகலனின் அணிவகுப்பாய் வெள்ளி தொழில் வெளுவெளுக்கும் உயிரியலும் ஊற்றெடுக்கும் குருவம் பட்டி கூத்தாடும் மழவர் நாடு மணமணக்கும் மக்கள் மனம் மெய்சிலிர்கும் வாழ்க எம்  மழவர் நாடு Happy Salem day

ஆண்

படம்
அன்னையின்  வயிறு கிழித்து  அவள் வழி உதிரம் குடித்து  அம்மணமாய் தரணி பதித்து வானவில்  வாழ்க்கையில்  வளம் பெற்று பனவோலையிலே  பானம் அருந்தும் பாதை மறந்து  காசோலையினை கிருக்கி கிழிக்கும் கீர்த்தி பெற வீடு துறந்து காடு மறந்து  பரதேசம் போயும் பாடாய் பட்டு பாடம் கற்று பணமும்  பெற்று  தாய்,சேயின்  நலம் காத்து தன்னவள் மனம் மகிழ  தவபுதல்வர்கள் பெற்றெடுத்து  தாலாட்டு பாட்டு முதல்  தரணி பாடும் கூத்து வரை கூட்டி சென்று கூடி குலவி கூற்றுரைத்து  கூட்டு சேர்த்து தலை கிளைகள் பெற்று தள்ளாது வயதிலும் தழைத்தோங்கும்  தல விருட்சம் கண்டு களிம்புற்று  தளர்ந்து உறங்கும்  மன்னா |  வாழ்க |                           

விவசாயம்

படம்
பசிக்கு புசித்திட பண்டங்கள் பண்ணணும் குடியவனும் குலம் பெயர்ந்திட குடியாதவன் கூடி தொழில் செய்யணும் குளங்களும் ஏரிகளும் மாரிகளால் மகிழ்ந்திடணும் அதற்கெனவே நாம் மாதவங்கள் செய்திடணும் புடலையிலும் பூசணியிலும் பூச்சு கொல்லி புறந்தல்லி இயற்கையுடன் இணைந்திங்கே இருள் போக்கி போற்றிடணும் தானியமும் திராவியமும் அறுவடைத்த அறிஞர்களே வணிக விலை வகுத்திடணும்  மாசற்ற பூவியமைத்து மாரிக்கு வழிவகுத்து நெற்களஞ்சிய கதிர் அறுத்து கருத்தளங்கள் சேர்த்திடுவோம் விண்ணுயர வித்தை பல வியத்தக வித்திட்டாலும் மண்ணுயர்த்தி மாரி காத்து மாசற்று மண்புழுவின் மகுடேற்றி மதிப்பளிப்போம் விளைச்சளின் வீரியத்தை விண்னேற்றி வான் சிறப்போம்

பறை

படம்
இசையின் ஞானம்  இனிமையும் அமைதியும் என  இதம் சேர்த்த கணத்தில்  கதையாய்  களங்களின் ஓர்  கலங்கரையாய்  கணிந்தது நம் பறை ; கலிங்கத்து பரணியில்  பரணிக்கு நிகராய்  பிளிரும் இசை  பறை ; போரடித்து, கதிர் அறுத்து,  கருத்தளங்கள் சேர்த்திடும்  கரங்களின் கைவினைகள் -இப்  பறையிசையின் பரிணாமங்கள்; நாவிரல் நாட்டியத்தின்  நவரச பாவங்கள் நம் நாளத்தின் தாளங்கள் ; களை திருத்தி களைத்த  தின்தோல்களுக்கு  தோல்கொடுத்து நிற்பவை இத்  தோல் பாவை ஆட்டங்கள்  அந்திமாலை மயக்கத்திலும்  ஆர்பரிப்பின் அடித்தளங்கள்  பறை தாங்கும் அடி தாளங்கள் ; தமிழ் கருவுலத்தின்  கருத்தளங்களை  களம் சேர்த்த  கலைஞர்களின்  கைவண்ணம் – நம்  பறை ; குலம் சேர்க்கும் குழவி முதல்  நிலம் கோர்க்கும் கிழார் வரை கிளிந்தோடும் கீர்த்தனைகள் இக்  காவிய காந்தங்கள் ; சீறி வரும் சிப்புகுச்சும், ஆடி வரும் அடிகுச்சும், பறைகளை  பதம் பார்க்கும் , ஆடா அண்டத்தாரையும் ஆடவைத்து  ஆழியையும் அதிர வைத்து  ஆர்பரிக்கும் இசை, ஆதி கண்ட பறை...,

பாரதி செய்வோம்

படம்
எட்டயபுரத்துகாரன் ஆனால் இவன் எண்திசைக்கும் சொந்தக்காரன்; கதைகளிலும் க விதைகளிலும் தமிழர் நெஞ்சில் தமிழ் விதை விதைத்தான்; தையலை தனக்கென்றே கொள்ளும் நிலை மாற்றி தையலின் தரம் போற்றி தரணி ஏற்றி ஓர் தவ புரட்சி செய்தான்; அன்னியமாய் தனித்து நின்ற ஆண்டிகளையும் ஒன்றிணைத்து ஒன்றியமாய் ஓங்கி நின்றான்; வெள்ளைத்தாளில் வேல் பாய்ச்சி வெள்ளயனை களம் கண்டான்; களம் கண்ட கலியுகத்துக்காரன் காளியையும் விட்டு வைத்ததில்லை, உன்னை நினைக்கும்  நிலை துறந்து என்னை நினைக்கும் நாத்திகம் ஏற்பேன் என எச்சரித்தான்; களம் கண்ட கலியுகத்துக்காரன் களிறேற காலம் கடந்தான் காட்டுத் தீ வளர்த்தே; அத்தீயினுடே தீந்தமிழ் வளர்ப்போம் தீராவிடம் காப்போம் வீட்டுக்கொரு பாரதி செய்வோம்

ஏறு தழுவுதல்

படம்
பொங்குக பொங்கல் பானையிடத்து மட்டுமல்ல போற்றி காத்து போர்த்தமிழ் வழி வந்த சேனை இடத்தும் தான் மனிதருக்குண்டே மாநேறி காத்து மாதவம் செய்தே வாழ்வான் தமிழன்; அந்நெறி குன்றா அறச்செயல் அமைத்தே  ஆண்டு வாழ்வான் தமிழன்; பேறுதற் பிறப்பாய் அன்னை கொடி வழி கொணர்ந்தே ஞான கோலமிட்டவன் தமிழன் அவள் பால் உண்டே வழி வழி வந்தோன் பிழை இழைத்திடுவானோ - ஒரு பழி சுமந்திடுவானோ  கோ மாதா பசுகளையும்  அதன் திசுகளையும் கலசம் ஏற்றி  களிம்பு காண்பான் தமிழன் வீரத்தின் ஊற்றாய் அன்பின் ஊற்றாய் சீறி பாயும் ஏறு தழுவுதல் சிறப்பே! சிரசுயர்ந்த சிந்தை கொண்டே சிந்து இனம் காக்கும்  சீவன்கள் தானே என் இனம் காக்க ஏறு தழுவ சீறி வரும் சிந்தினமே வா ! உன் திமிலில் என் இதழ் இணைந்து இறுமாப்புரைப்பேன்  வா ! என் தமிழினம் காப்பேன் நான்..