இடுகைகள்

daughter's love லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாதரை போற்றுவோம்

படம்
உதிரத் துளிகள்  உலகிற்கு  உவகையை  தந்த வண்ணம்  உள ; செவி  தொடும்  மழலை சொற்கள்  குழலையும்  யாழையும்  ஏறிட்டு  பார்க்க வைப்பதில்  பாரபட்சம் பார்ப்பதில்லை ; உயிர் கலக்கும்  மெய் உரசல் எல்லாம்  உயிர்மெய்யை  எல்லா காலத்திலும்  தந்து செல்வதில்லை ; அது அப்படி ஆகி போதலும்  அமைத்தவன் செயலே,  அதை உணராது  மாதர் மனம் நோக  மாமொழி வசைகள்  எதற்கு ? புவி சேரா  பிண்டத்தை  பிழையென சூட்டும்  பிதற்றல்கள் வேண்டா . மழலை கொள்ளா  மாந்தரும் மாந்தரேயென  மாநெறி காத்தல் - நம்  மாண்பிற்கு அழகு  மாதரை போற்றுவோம் சில நேரத்திலேனும்  அவர் தம்  மனங்களையும் .    

தந்தையின் குட்டி இளவரசி

படம்
ஒற்றை நிறப்புரி ஒன்றாய் கலந்து  ஒய்யார சிங்காரி  உதித்து விட்டாள்  உலகநாயகனுக்கு. ஒற்றை  நிறப்புரி ஒன்றாய் கலந்து  ஒய்யார சிங்காரி  உதித்து விட்டதலாலே  அவன்  உலகநாயகனாகி போனான்.  அழகிய அச்சில்   உயிர் ஊற்றி  வார்த்தமையால் பேரழகி ஒருவள்  பேரண்டத்தில்  கூடிக் கலக்க  கூடிவிட்டாள். பரந்த மார்பில்  பாதை  செய்து  பார்த்திருந்த அவனுக்கு  சின்னசிறு பாதம் கொண்டு  எட்டி வைத்து  நடை பழக  நங்கை அவள்  தோன்றிவிட்டாள். ஜனத்தின் நாயகி  ஜானகி வந்து  ஜடைபின்ன கடவாலென  ஜடாமுடி தரித்து  ஜெபம் செய்து  காத்திருந்தான் . இனி சிலகாலம்  ஜடை பின்னி  பூ சூடி  போட்டு வைத்து  மையிட்டு அழகு பார்த்து  கிடப்பாள் அவன்  உலகாளும்  உலகநாயகி .