இடுகைகள்

பெண் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாதரை போற்றுவோம்

படம்
உதிரத் துளிகள்  உலகிற்கு  உவகையை  தந்த வண்ணம்  உள ; செவி  தொடும்  மழலை சொற்கள்  குழலையும்  யாழையும்  ஏறிட்டு  பார்க்க வைப்பதில்  பாரபட்சம் பார்ப்பதில்லை ; உயிர் கலக்கும்  மெய் உரசல் எல்லாம்  உயிர்மெய்யை  எல்லா காலத்திலும்  தந்து செல்வதில்லை ; அது அப்படி ஆகி போதலும்  அமைத்தவன் செயலே,  அதை உணராது  மாதர் மனம் நோக  மாமொழி வசைகள்  எதற்கு ? புவி சேரா  பிண்டத்தை  பிழையென சூட்டும்  பிதற்றல்கள் வேண்டா . மழலை கொள்ளா  மாந்தரும் மாந்தரேயென  மாநெறி காத்தல் - நம்  மாண்பிற்கு அழகு  மாதரை போற்றுவோம் சில நேரத்திலேனும்  அவர் தம்  மனங்களையும் .    

தந்தையின் குட்டி இளவரசி

படம்
ஒற்றை நிறப்புரி ஒன்றாய் கலந்து  ஒய்யார சிங்காரி  உதித்து விட்டாள்  உலகநாயகனுக்கு. ஒற்றை  நிறப்புரி ஒன்றாய் கலந்து  ஒய்யார சிங்காரி  உதித்து விட்டதலாலே  அவன்  உலகநாயகனாகி போனான்.  அழகிய அச்சில்   உயிர் ஊற்றி  வார்த்தமையால் பேரழகி ஒருவள்  பேரண்டத்தில்  கூடிக் கலக்க  கூடிவிட்டாள். பரந்த மார்பில்  பாதை  செய்து  பார்த்திருந்த அவனுக்கு  சின்னசிறு பாதம் கொண்டு  எட்டி வைத்து  நடை பழக  நங்கை அவள்  தோன்றிவிட்டாள். ஜனத்தின் நாயகி  ஜானகி வந்து  ஜடைபின்ன கடவாலென  ஜடாமுடி தரித்து  ஜெபம் செய்து  காத்திருந்தான் . இனி சிலகாலம்  ஜடை பின்னி  பூ சூடி  போட்டு வைத்து  மையிட்டு அழகு பார்த்து  கிடப்பாள் அவன்  உலகாளும்  உலகநாயகி .   

நவீன சந்தை மீதான தமிழ் சிந்தை

படம்
  சாமானியனிடத்தில்  சந்தைப்படுத்த  சுவரொட்டி மட்டும்  போதவில்லை இன்று  அழகாபுரத்து சாலையில்  பவனிவரும் அழகியெல்லாம்  சொகுசுகாரில் விரலுக்கு  சொடுக்கெடுத்து விட்டு  விரல் தேய  தொடுதிரையில்  தொலைந்து போகின்றார்கள்  இவர்களின்  மனம் கவர மணமுவந்த  மரக்காகித  கூழும்  மக்கிப்போய்  மண் சேர்கின்றன  இனி என்ன  இவர்களுக்கு இணைய உலகத்தில்  உலா வரும்  இளசுகளை  இனம் அறிந்து  மனம் கவர  சந்தை  இதிகாசங்கள்  இணையத்துடன்  இணைந்துவிட்டன  தட்டும் விரல்களை  தாவிக் கொண்டு  தபக்கென குதிக்கும்  தரவரிசை முடிவுகளுக்குள் தடகள ஆட்டமே  நடக்குது இங்கே  சந்தை பொருளை  விந்தை செய்து  சிந்தை சேர்த்து  சில்லறை சேர்க்க சமூக ஊடகம்  சேவை செய்யுது  மிகைப்படுத்தி  முன்வைக்கப்பட்ட  மின்னஞ்சல்கள் சில முக்கோண பணிக்கூழை  முன்வைத்து மூக்கொழுகளை  முன் நிருத்தி  கைக்குட்டையையும்  கைதுருத்தி போகுது  ஆயிரம் ஆயிரம்  அச்சு எழுத்துகளை  அழகாய் கோர்த்து  மொழிகளில் மெருகேற்றி  வழியெல்லாம் விழிக்கோர்  விருந்து சமைகின்றன  இத்துனை செய்யும்  இணைய வணிகமும்  நவீன சந்தையும்  நவநாகரிக மாந்தரின்  நாடித்துடிப்பின்  கரம் பற்றியே  அறம் செய்கின்றன 

அகரமும் ககரமும்

படம்
  அன்பும் கருணையுமாய்  அறிவும் காதலுமாய்  அழகும் காந்தமுமாய் ஆகாசமும் காற்றுமாய்  அலகும் கனவுமாய்  அறமும் கடமையுமாய்  அகரமும் காகிதமுமாய்  அணிகலனும் கழுத்துமாய்  ஆடவனும் கன்னியுமாய்  அவனும் காதலியும்   காலத்தில்.

மகளை பெறும் மகராசன்

படம்
மனங்கொண்டவள் மணமேடை கண்டபோதே  மாகளிம்பும் மனதில் குடிகொண்டது  குடைகூலி குடுக்காமலே ;  குலவிக்காக கலவி செய்து  காத்திருந்த கனமெல்லாம் காதலியின் கதைப்புகள் தன்   கரு கொண்ட திரு ஒற்றியே ; கண்ணனோ ? அவள் காதலியோ ? என  காத்திருப்புகள்  புதிர்கொள்ள செய்தன. மனங்கொண்ட மகராணி  மாதவனை தன் வசம் அழைத்து  வம்சத்தின் வசம் சேர  வயிறு கொண்டது  வள்ளுவனோ ? வாசுகியோ ? என மொழி வினாவினாள் ; ஓவியனோ  வரையோலையை  வசம் இழுத்து வாசம் பிடித்து  உச்சி முகர்ந்து உள்ளம் குளிர்ந்து  வரையோலை வயிறு கொண்டது  வாசுகின் வரவிற்கென  வாஞ்சை கொண்டான். காகிதத்தில் தமிழ்  கருத்தளங்கள்  கொணர்ந்து கொட்டும் கவிஞனே, வாசுகியின் வசம் வாஞ்சை கொண்டு  வரம் தரும் என்  வள்ளுவனே,  ஆண் மகவு கொள்ளும்  ஆவல் கொள்ளாது  தையலை உனக்கே  உரித்தாகும்  விந்தை கூறு. என் சிறந்தவளே, தோழியே, நின் தசையில் ஓடி  வித்தில் கலந்து  விண் செல்லும்  வினை செய்யோள் வரம் தேடும்  விந்தை சொல்வேன்  கேளாய்  நின் வரவை  நித்தம் நித்தம் தம் சிந்தையிற்கொண்டு  கர்வம் கொண்ட  உந்தையின்  உளறல்  கேட்டிருப்பாயோ ? மகவென  மகளை கொண்டு  அமுதூட்டி  அன்பு செய்து  ஆர்பரித்து  உயிர் உலாவி 

மதிப்பிற்குரிய மணமகளுக்கு

படம்
ஒரு பூ  புலம்பெயர்கிறது புன்னகையுடன்  தன் குளத்திற்கு வளம் சேர்க்க,  புலம் பெயர்ந்த பின்னும்  வளம் சேர்க்கும் பூவோ இது ? ஆம் , புலம் பெயர்ந்தாலும்  நற்குளம் கண்டு  குலை தந்து  குணம் காத்து  குணவதியாய்  புகழ் சேர்க்கும் பூவிது. பூவினை நேசிக்கும் காதலன்  பூலோகத்தில் உண்டல்லோ ? இதில் என்ன விந்தை , இங்கு காதலனை நேசிக்க  பூக்களே பூத்து புலம் பெயர ஆவல்  கொண்டுள்ளபோது  ? விந்தையில்லை விந்தையில்லை. பூவே , புலம் பெயரும்  குளம் நினக்கு ஓர் பெருங்களம். பெருமை கொள்வாய், அவ்வண்ணமே   பொறுமையும் கொள்வாய்.  குளம் நின்னை  கொணர்தவனை மட்டும்  கொண்டு முடியவில்லை  அது அழகாய்  அவன் வழி கண்ட  ஆலமார விழுதுகளையும்  அடக்கியுள்ளது . விழுதுகள் உனக்கு  விகராமாய் தோன்றலாம்  விண்ணோக்கி நின் புருவம் உயர்த்தலாம்  ஆயினும் அவர்களும் ஒரு  விதை தந்த விழுதுகளே, நின் குணத்தால்  நித்தமும் பூத்து  புகழ் சேர்ப்பாய்  பூவியில். மனம்கொண்டவன் –நின்  மாதவன்  மனம் பிறழ்ந்து  மொழி பகிர்ந்தாலும்  மனம் கோனாது-நீன்  மைய்யலில் மைய்யம் கொண்டிருப்பாய். பூவே இன்னுமும்  சொல்வேன் கேளாய் , இந்த பூ புவியில் பூத்தது புலம் பெயரவும்  மனம் பகிரவும்