ஆண் பெண் நட்பு





பதின் தாண்டி
முதிர் கொண்ட காலத்தில்
முந்துதல் இன்றி 
நட்பே மூட்பென
அன்பே அகமென 
கருத்தியல் கொண்டே 
கருத்தரிகின்றன-இக்
கை கோர்ப்புகள்;

மாண்பு மொழியே 
மாலை வரை 
மனம்  கொண்டபோதிலும் 
சினேக  மொழியே
சிரிப்பில் சேர்த்து
சித்திரம் எடுக்கிறது;

கோதிடும் தலையும் 
இணைந்திடும் விரலும் – மன 
இன்னல்கள் தீர்த்தே 
இனிமை சேர்க்கும்
அவ்வளவே ;

பாலினம் மறந்து 
பல கதைகள் பேசி
பண்டங்கள் பகிர்ந்தே 
பகல் தேய்கிறது ;
எதிர் பாலின நட்பை
எதிர் கொண்டோர்க்கெல்லாம் 
புதிர் தந்தே போகிறது 
சில கள்ளசிரிப்புகள்;

புதிர் கண்ட நட்புகள் 
புறத்தே பல புரிதலும் கண்டு 
புன்முறுவல் பூத்தே 
புனர் ஜென்மம் காண 
மனம் கொள்கிறது;

பெண்ணின்  ஆண்மையும்
ஆணின் பெண்மையும்
அன்பில் அறிந்திட 
நட்பே வித்து ;

காலங்கள் கடந்தாலும் 
கல்யாணம் முடிந்தாலும் – தம்
மழலை விளித்தலில்
விண்ணேற்றம்
காண்கிறது  சில
வியத்தகு நட்புகள்.......

கருத்துகள்

அதிகம் சுவைத்தவை

சௌசாலயம்

பெண் மயிலின் தோகைகள்

அவர் தான் பெரியார்