பறை


இசையின் ஞானம் 
இனிமையும் அமைதியும் என 
இதம் சேர்த்த கணத்தில் 
கதையாய் 
களங்களின் ஓர் 
கலங்கரையாய் 
கணிந்தது நம் பறை ;
கலிங்கத்து பரணியில் 
பரணிக்கு நிகராய் 
பிளிரும் இசை 
பறை ;
போரடித்து, கதிர் அறுத்து, 
கருத்தளங்கள் சேர்த்திடும் 
கரங்களின் கைவினைகள் -இப் 
பறையிசையின் பரிணாமங்கள்;
நாவிரல் நாட்டியத்தின் 
நவரச பாவங்கள் நம்
நாளத்தின் தாளங்கள் ;

களை திருத்தி களைத்த 
தின்தோல்களுக்கு 
தோல்கொடுத்து நிற்பவை இத் 
தோல் பாவை ஆட்டங்கள் 
அந்திமாலை மயக்கத்திலும் 
ஆர்பரிப்பின் அடித்தளங்கள் 
பறை தாங்கும் அடி தாளங்கள் ;

தமிழ் கருவுலத்தின் 
கருத்தளங்களை 
களம் சேர்த்த 
கலைஞர்களின் 
கைவண்ணம் – நம் 
பறை ;

குலம் சேர்க்கும் குழவி முதல் 
நிலம் கோர்க்கும் கிழார் வரை
கிளிந்தோடும் கீர்த்தனைகள் இக் 
காவிய காந்தங்கள் ;

சீறி வரும் சிப்புகுச்சும்,
ஆடி வரும் அடிகுச்சும்,
பறைகளை  பதம் பார்க்கும் ,
ஆடா அண்டத்தாரையும்
ஆடவைத்து 
ஆழியையும் அதிர வைத்து 
ஆர்பரிக்கும் இசை,
ஆதி கண்ட பறை...,

கருத்துகள்

அதிகம் சுவைத்தவை

சௌசாலயம்

பெண் மயிலின் தோகைகள்

அவர் தான் பெரியார்