இடுகைகள்

சிறந்த தமிழ் கவிதைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தந்தையின் குட்டி இளவரசி

படம்
ஒற்றை நிறப்புரி ஒன்றாய் கலந்து  ஒய்யார சிங்காரி  உதித்து விட்டாள்  உலகநாயகனுக்கு. ஒற்றை  நிறப்புரி ஒன்றாய் கலந்து  ஒய்யார சிங்காரி  உதித்து விட்டதலாலே  அவன்  உலகநாயகனாகி போனான்.  அழகிய அச்சில்   உயிர் ஊற்றி  வார்த்தமையால் பேரழகி ஒருவள்  பேரண்டத்தில்  கூடிக் கலக்க  கூடிவிட்டாள். பரந்த மார்பில்  பாதை  செய்து  பார்த்திருந்த அவனுக்கு  சின்னசிறு பாதம் கொண்டு  எட்டி வைத்து  நடை பழக  நங்கை அவள்  தோன்றிவிட்டாள். ஜனத்தின் நாயகி  ஜானகி வந்து  ஜடைபின்ன கடவாலென  ஜடாமுடி தரித்து  ஜெபம் செய்து  காத்திருந்தான் . இனி சிலகாலம்  ஜடை பின்னி  பூ சூடி  போட்டு வைத்து  மையிட்டு அழகு பார்த்து  கிடப்பாள் அவன்  உலகாளும்  உலகநாயகி .   

நவரஸா

படம்
  கருவில் உதித்து உரு கண்ட என் சிசுவின் பொக்கை வாய் நகையும் அசௌகரிய அழைப்பின் அழுகையும் உதிரம் மிகுந்த இளிவரலும் அது கொணர்ந்த உவகையும் மாந்தர் மகிழ்வின் மனம் புரியா மருட்கையும் அள்ளி அணைக்கும் அன்புகள் உணரா அச்சமும் -பின் அன்பின் இனம் கண்ட பெருமிதமும் அண்டத்தில் அணைத்தோர் வசம் செல்லும் வெகுளியும் பின் சோர்ந்து துயிலும் அமைதியும் அகிலம் ஆளவிருக்கும் என் ஈஸ்வரியின் நவரசங்கள்            

நவீன சந்தை மீதான தமிழ் சிந்தை

படம்
  சாமானியனிடத்தில்  சந்தைப்படுத்த  சுவரொட்டி மட்டும்  போதவில்லை இன்று  அழகாபுரத்து சாலையில்  பவனிவரும் அழகியெல்லாம்  சொகுசுகாரில் விரலுக்கு  சொடுக்கெடுத்து விட்டு  விரல் தேய  தொடுதிரையில்  தொலைந்து போகின்றார்கள்  இவர்களின்  மனம் கவர மணமுவந்த  மரக்காகித  கூழும்  மக்கிப்போய்  மண் சேர்கின்றன  இனி என்ன  இவர்களுக்கு இணைய உலகத்தில்  உலா வரும்  இளசுகளை  இனம் அறிந்து  மனம் கவர  சந்தை  இதிகாசங்கள்  இணையத்துடன்  இணைந்துவிட்டன  தட்டும் விரல்களை  தாவிக் கொண்டு  தபக்கென குதிக்கும்  தரவரிசை முடிவுகளுக்குள் தடகள ஆட்டமே  நடக்குது இங்கே  சந்தை பொருளை  விந்தை செய்து  சிந்தை சேர்த்து  சில்லறை சேர்க்க சமூக ஊடகம்  சேவை செய்யுது  மிகைப்படுத்தி  முன்வைக்கப்பட்ட  மின்னஞ்சல்கள் சில முக்கோண பணிக்கூழை  முன்வைத்து மூக்கொழுகளை  முன் நிருத்தி  கைக்குட்டையையும்  கைதுருத்தி போகுது  ஆயிரம் ஆயிரம்  அச்சு எழுத்துகளை  அழகாய் கோர்த்து  மொழிகளில் மெருகேற்றி  வழியெல்லாம் விழிக்கோர்  விருந்து சமைகின்றன  இத்துனை செய்யும்  இணைய வணிகமும்  நவீன சந்தையும்  நவநாகரிக மாந்தரின்  நாடித்துடிப்பின்  கரம் பற்றியே  அறம் செய்கின்றன 

அகரமும் ககரமும்

படம்
  அன்பும் கருணையுமாய்  அறிவும் காதலுமாய்  அழகும் காந்தமுமாய் ஆகாசமும் காற்றுமாய்  அலகும் கனவுமாய்  அறமும் கடமையுமாய்  அகரமும் காகிதமுமாய்  அணிகலனும் கழுத்துமாய்  ஆடவனும் கன்னியுமாய்  அவனும் காதலியும்   காலத்தில்.

மிதிப்போம் மிதிவண்டி

படம்
  காலச்சக்கரம் சுழல்கிறது புதியதொரு விடியலை காண பழையனவென கழித்ததெல்லாம் பகட்டாய் நம் வாழ்வியலில் படர்ந்தோடுகிறது மீண்டும், மீண்டும் மீண்டும்.   அதில் இன்று மின்சார பொறிபோல் அகம் கொண்டது இந்த மிதிவண்டி.   காலச்சக்கரம் தம் பாதையை பின்னோக்கி   மிதிக்கிறது சற்றே மதிக்கிறது   கண நேரத்தில் கடந்து சென்ற சொகுசு வாகன சுகவாசிகளையும் சற்று வியர்வை குளியலில் நனைத்திருக்கிறது மிதிவண்டி   புல்லட்டு ஏறி பூவனம் சுற்றிய புன்னகை அரசர்களையும் பொற்பாதம் கொண்டு மிதிவாங்கி கொண்டது மிதிவண்டி   எரிபொருள் ஏற்றதில் சிற்றம் கொண்ட சிறார் சிலரை   சிந்திக்க செய்து     சிந்தை சக்கரத்தின் பாதையை சற்று தன் வசம் திருப்பி உள்ளது மிதிவண்டி   இனி சாலைகளில் சில சுழற்சிகள் புதுமையில் சுழலவிருக்கின்றன   ஒய்யாரமாய் ஓய்வெடுத்த ஓவிய பாதங்களும் ஒழுகவிருக்கின்றன வேர்வை கசிவில், கசியட்டும் சில காலம்     கருத்துடனே   காலங்கள் எம் கண்மணிகளுக்கும் கண்ணின் மணிகளுக்கும் காதலை தந்து போகட்டும் கால்களுக்கும் கட்டைகளுக்

வீர வாழ்க்கை

படம்
  அண்டத்தில் பிண்டங்கள் பிருதிவி கொணர்ந்து கொட்டுவதெல்லாம் எதற்காக ? கூடி குலாவி குழவி தந்து கூடு சேர்த்து காடுகள் செல்ல மட்டுமோ ? அல்ல அல்ல   இன்று பிறக்கும் பிருதிவி கொண்ட பிண்டதிற்கெல்லாம் அண்டத்தில் ஓர் அகராதியே இருக்கிறது.   அது தன்னை அறிதலாம். தையல் வையத்தில் வனம் சேர்ந்த நாள் தொட்டு அவர் தொட்ட உச்சங்கள் சொச்சமல்ல, சொச்சமல்ல.   மண் தொட்டு மகிழ்வுற்று மரபாச்சியில் மனமுற்று பின் பூப்பெய்தி புடவை கட்டி பொட்டு வைத்து சமிக்கைகளில் சொல்லிவைத்து வரன் பார்த்து உயிர் சேர்த்து உயிர் தந்து போவதற்கல்ல இந்த வாழ்க்கை   மாறாய் பள்ளி சென்று பட்டம் பெற்று பதவி கொண்டு பட்சியாய் பறந்து பட்டறிவு பல பெற்று பார் சுற்றி பார்வை தரும் கோணக் குறிப்பறிந்து கபால ஓட்டினுள்ள கருவி தரும் கருத்தின்  வழி காதல் செய்து மீண்டுமோர் நீட்சியாய் நின் நிலத்திற்கோர் வீர விதையிட்டு தன்னை அறிந்து தளரும் வயதிலும் விதைகளை விருட் சமாக்குதல் வீர வாழ்க்கை.

மானுட இச்சை

படம்
மானுட பயலாய்  மண் சேரும் உயிரெல்லாம்  மனம் கொண்ட மாந்தரின்  இச்சையே       மண் சேர்ந்த பின்னே  மழலையில் மனமகிழ மரப்பாச்சி பொம்மையில்  இச்சை  மண்தொட்ட பின்பு  கண் கண்ட தூரம் வரை கால் சுற்ற  இச்சை  நாக்குளரலில் நான்கு சொல்  நா விட்டு போனால்  நாலந்தா முதல்  நாசா வரை சேர்க்க  நம்மை  தந்தோருக்கு  இச்சை  நால்வர் கூட்டம்  நட்பில் கொண்டால்  குட்டி குறும்பாய்  அரும்பிட  இச்சை  கதையும் கணக்கும் கருத்தில் கொண்டு  சிறு மதிப்பெண் கூட்டி   சிரசு உயர் கொள்ளவும்  சிறு நேர இச்சை  பட்டம் பெற்று பல திட்டம் தீட்டிட  தினம் கல்லூரி  கல்வியியை கற்றிட இச்சை  கடை கல்லூரி  காலம் கழியும்  கணத்தினுள்  காதல் பேரில் –சில  காலம் கொண்டிட  இச்சை  சித்தம் தெளிந்து  சில சில்லறை  சேர்க்க புது  செய்கைகள்  செய்திட   இச்சை  செய்கையின்  சேர்க்கையில் சேர்த்த சில்லறை  சிலிர்ப்பில் புது  சிநேகம் ஒன்றை  காதலாய் கொண்டிட இச்சை  கொண்ட காதலை  கொண்டு செல்லும் காலம் வரை  கரம் பற்றி  காத்திட  இச்சை  காதல் களிப்பில்  கூடி திரிந்து  குவளை கொண்டு  திரு பல தந்து  கூட்டி திரிந்து  கூடு சேர்த்திட   இச்சை  கூட்டில்  குயில்கள்  கூடி திரியும்  க

சௌசாலயம்

படம்
  நலம் வேண்டி வலம் சுற்றி திருத்தலம் போற்றி நளபாகம் ருசித்து நைய்ய புடைத்து நாவிரல் நக்கி பக்தியில் மூழ்கி முழங்கால் நனைத்து நாமம் ஜபித்து நமஸ்கரிப்பதில் மட்டும் கிட்டுவதில்லை சில வாழ்வியல் வளங்கள்   மாறாய் வள்ளுவன் வாக்கில் வணங்கி சோறை குடித்து நீரை புசித்தலே நீடித்த வாழ்விற்கு வளம் சேர்க்கும் வழிகளாம்.   கூடுதலாய் குடல் சேர்க்கும் குப்பைகளை கூட்டி வரி மலம் வார்க்கும் மார்கமெல்லாம் மாக்கோயிலே மாந்தர்க்கு.   தமிழ்குடி தட்டும் தளங்கள் எல்லாம் திருத்தலம் காணும் கருத்துடனே   உடல் சேரா உபரிகள் நீக்கி உயிர் உய்ய உரம் சேர்த்து உளவு செய்ய ஓர் களம் செய்வோம் ; குடல் கொள்ளா குளம் நீக்க மனை கொள்ளும் சௌசாலயங்கள் சுகம் காக்கும் சூத்திரங்கள் ;   ஆலயம் செய்வோம் சௌசாலயம்   செய்வோம் மனைகளில் கொள்வோம் இதை நம் மனதிலும் கொள்வோம் ;

மகளை பெறும் மகராசன்

படம்
மனங்கொண்டவள் மணமேடை கண்டபோதே  மாகளிம்பும் மனதில் குடிகொண்டது  குடைகூலி குடுக்காமலே ;  குலவிக்காக கலவி செய்து  காத்திருந்த கனமெல்லாம் காதலியின் கதைப்புகள் தன்   கரு கொண்ட திரு ஒற்றியே ; கண்ணனோ ? அவள் காதலியோ ? என  காத்திருப்புகள்  புதிர்கொள்ள செய்தன. மனங்கொண்ட மகராணி  மாதவனை தன் வசம் அழைத்து  வம்சத்தின் வசம் சேர  வயிறு கொண்டது  வள்ளுவனோ ? வாசுகியோ ? என மொழி வினாவினாள் ; ஓவியனோ  வரையோலையை  வசம் இழுத்து வாசம் பிடித்து  உச்சி முகர்ந்து உள்ளம் குளிர்ந்து  வரையோலை வயிறு கொண்டது  வாசுகின் வரவிற்கென  வாஞ்சை கொண்டான். காகிதத்தில் தமிழ்  கருத்தளங்கள்  கொணர்ந்து கொட்டும் கவிஞனே, வாசுகியின் வசம் வாஞ்சை கொண்டு  வரம் தரும் என்  வள்ளுவனே,  ஆண் மகவு கொள்ளும்  ஆவல் கொள்ளாது  தையலை உனக்கே  உரித்தாகும்  விந்தை கூறு. என் சிறந்தவளே, தோழியே, நின் தசையில் ஓடி  வித்தில் கலந்து  விண் செல்லும்  வினை செய்யோள் வரம் தேடும்  விந்தை சொல்வேன்  கேளாய்  நின் வரவை  நித்தம் நித்தம் தம் சிந்தையிற்கொண்டு  கர்வம் கொண்ட  உந்தையின்  உளறல்  கேட்டிருப்பாயோ ? மகவென  மகளை கொண்டு  அமுதூட்டி  அன்பு செய்து  ஆர்பரித்து  உயிர் உலாவி 

எஞ்சாமி

படம்
அமுதமும் அலுவலும் அன்னையும்  அய்யனும்  கொண்டவளும் அவள்பால் உண்டவளும் இயற்கையும் அதில் இசைந்த இசையும் செடியும் கொடியும் அது கொண்ட ஆடும் மாடும் அண்டமும் பிண்டமும் அருவமும் உருவமும் கனவும் கல்வியும் கலவியும் காமமும் காதலும் சாதலும் கள்வனும் கண்ணனும் தனமும் தானியமும் காசும் கருத்தளமும் தலைவனும் தலைவியும் தரணி வாழ் மாந்தர்கள் மைய்யல் கொள்ளும் எம் மொழி தமிழும் கடவுள்கள் எனக் கொண்டாடும் அகிலத்தில் அன்பையும்   அறிவையும் அண்டத்தாரை ஆளும் ஆண்டவனாய் கொள்வது எம் சிந்தைபோக்கு .

பாரதி செய்வோம்

படம்
எட்டயபுரத்துகாரன் ஆனால் இவன் எண்திசைக்கும் சொந்தக்காரன்; கதைகளிலும் க விதைகளிலும் தமிழர் நெஞ்சில் தமிழ் விதை விதைத்தான்; தையலை தனக்கென்றே கொள்ளும் நிலை மாற்றி தையலின் தரம் போற்றி தரணி ஏற்றி ஓர் தவ புரட்சி செய்தான்; அன்னியமாய் தனித்து நின்ற ஆண்டிகளையும் ஒன்றிணைத்து ஒன்றியமாய் ஓங்கி நின்றான்; வெள்ளைத்தாளில் வேல் பாய்ச்சி வெள்ளயனை களம் கண்டான்; களம் கண்ட கலியுகத்துக்காரன் காளியையும் விட்டு வைத்ததில்லை, உன்னை நினைக்கும்  நிலை துறந்து என்னை நினைக்கும் நாத்திகம் ஏற்பேன் என எச்சரித்தான்; களம் கண்ட கலியுகத்துக்காரன் களிறேற காலம் கடந்தான் காட்டுத் தீ வளர்த்தே; அத்தீயினுடே தீந்தமிழ் வளர்ப்போம் தீராவிடம் காப்போம் வீட்டுக்கொரு பாரதி செய்வோம்