இடுகைகள்

friendship லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மதிப்பிற்குரிய மணமகளுக்கு

படம்
ஒரு பூ  புலம்பெயர்கிறது புன்னகையுடன்  தன் குளத்திற்கு வளம் சேர்க்க,  புலம் பெயர்ந்த பின்னும்  வளம் சேர்க்கும் பூவோ இது ? ஆம் , புலம் பெயர்ந்தாலும்  நற்குளம் கண்டு  குலை தந்து  குணம் காத்து  குணவதியாய்  புகழ் சேர்க்கும் பூவிது. பூவினை நேசிக்கும் காதலன்  பூலோகத்தில் உண்டல்லோ ? இதில் என்ன விந்தை , இங்கு காதலனை நேசிக்க  பூக்களே பூத்து புலம் பெயர ஆவல்  கொண்டுள்ளபோது  ? விந்தையில்லை விந்தையில்லை. பூவே , புலம் பெயரும்  குளம் நினக்கு ஓர் பெருங்களம். பெருமை கொள்வாய், அவ்வண்ணமே   பொறுமையும் கொள்வாய்.  குளம் நின்னை  கொணர்தவனை மட்டும்  கொண்டு முடியவில்லை  அது அழகாய்  அவன் வழி கண்ட  ஆலமார விழுதுகளையும்  அடக்கியுள்ளது . விழுதுகள் உனக்கு  விகராமாய் தோன்றலாம்  விண்ணோக்கி நின் புருவம் உயர்த்தலாம்  ஆயினும் அவர்களும் ஒரு  விதை தந்த விழுதுகளே, நின் குணத்தால்  நித்தமும் பூத்து  புகழ் சேர்ப்பாய்  பூவியில். மனம்கொண்டவன் –நின்  மாதவன்  மனம் பிறழ்ந்து  மொழி பகிர்ந்தாலும்  மனம் கோனாது-நீன்  மைய்யலில் மைய்யம் கொண்டிருப்பாய். பூவே இன்னுமும்  சொல்வேன் கேளாய் , இந்த பூ புவியில் பூத்தது புலம் பெயரவும்  மனம் பகிரவும்

நட்பின் நாட்டியங்கள்

படம்
அயலானாய் அகர கூடத்தில் அமர்ந்திருந்தேன் இது நானோ   ? இல்லை இதிகாச பிதற்றலோ ? என மன இல்லமெல்லாம் சிந்தை பின்னல்கள்- பின் இல்லை என தெளிவுற்று இனியவரை இனம் காண இனித்தேன் ;   கண்டேன் கன்னி ஒருத்தியை கவி பாரதியின் கன்னியோ இவள் என என்னுள் கதைத்தும் கொண்டேன் , காலங்கள் கலாய்ப்பாய் கரைதல் கண்டு யானும் கலைந்து கலாய்த்தோர் வசம் கலந்தேன்   தாடிக்காரன் சீண்டல்கள் சில நேரம் சீற்றம் கொள்ள செய்தாலும் –அவன்   நற் சிந்தை கொண்டு இணங்கி பிணைந்திருதேன்   அச்சிந்தை சில அன்பர்களை நண்பர்களாய் இனம் கண்டு தந்தது.   இப்படியும் மாந்தர் இருப்பரோ மாநிலத்தில் என நினனக்கும் பொறுத்து அவர்தம் வினைகள் விந்தயாகியது.   நட்பிற்கும் கலங்கும் கண்ணன், பாசத்தில் பீச்சிடும் பச்சிளங் குழந்தை, குளிருக்கு மூட்டிய தீ போல் குறும்புகளால் மனம் கொண்ட மாந்தன், சிரிப்பில் தன் குறிப்பெழுத சிலிர்த்த சினை கண்ட சிங்காரி, ஊண் சோற்றிற்கு உமிழ் நீர் சுரக்கும் சுந்தரி , லொள் என்ற நாய் குறைப்பின் ஞொயத்தில் தாய் விளிக்கும் தமிழ் தந்த ஆங்கில மொழி     திருத்

நட்பதிகாரம்

படம்
இயந்திரவியல் துறையில் இணைந்த காலத்தில் இன்னது செய்வதெனத்   தெரியாமல் கழிந்தன நாட்கள். கல்லூரி பாதையில் கால்கள் சென்ற போதிலும் காரணம் தெரியாமல் காலங்கள் காலமாகிப் போனது. இயந்திர ரயிலின் கடைசி பெட்டியில் இணைக்கப்பட்ட இருபத்தெட்டின் இரண்டாம் மூன்றில் என் பெரயரும் இருந்தது. நட்பென நால்வருடன் நல்கிய போதிலும் நான் தேடிக் கண்டது என்னை , என்னைப் போல் நின்னை. அங்கொரு மூலையில் கதவுகள் திறக்கும் காற்றோசையின் பின்னால் கருநிற கண்ணன் ஒருவன் காத்திருந்தான் – என்னுள் கலக்கக் கதைத்திருந்தான். எனக்குப் பின்னால் அமர்ந்து எர்ணாகுலம்   வந்தாய் என எந்நாளும் சொல்லி வியக்கும் எம் எண்ண மொழிகள் அங்கொரு மூளையில் சாரை எறும்புகள் சீனி தேடி ஒரு யாத்திரை சென்றன யாத்திரை யாமத்தில் யானும் சேர்ந்தேன் யாத்திரை கொண்டேன் நின்னை அடைந்தேன் பின் கண்ட காட்சி எல்லாம் கவிக்கத்   தான் வேண்டுமோ? சாகா வரம் தந்து சகாப்த நட்பிற்கு வித்திட்டாய் இது போல் சாட இனி இல்லை நின்போல் ஒரு சாமானியன் யானும் அஃதே     நாம் கொண்ட நட்பும் நாவிட்ட நளபா