உன் மனைவி என்ன செய்கிறாள்?
உன் மனைவி என்ன செய்கிறாள்? அவள் சோம்பல் முறிக்கிறாள், சாணம் தெளிக்கிறாள், கோலம் போடுகிறாள், பிள்ளையார் வைக்கிறாள், கர்பகிரகம் சுற்றுகிறாள், குளம்பி குடிக்கிறாள், பாடல் வரி ருசிக்கிறாள், இன்னமுது சமைக்கிறாள், பாத்திரம் துலக்குகிறாள், வீட்டில் இருந்தே பணி செய்து பெரும் பாத்திரம் வகிக்கிறாள், குழந்தை பராமரிக்கிறாள், அமுதூட்டுகிறாள், அதில் பெரும் அலப்பறையும் செய்கிறாள், அலமாரி அடுக்குகிறாள், கழிவறை சுத்தம் செய்கிறாள், நாளுக்கு ஒருமுறை ஏனும் கயல்விழி உருட்டி மிரட்டுகிறாள்,சிரிக்கிறாள், சிணுங்குகிறாள், துணிகள் உலர்த்துகிறாள், கைசெலவிற்கு பணம் தருகிறாள், காதல் செய்கிறாள், அம்மா இல்லாத நேரத்தில் கன்னத்தில் கண்றாவி செய்கிறாள், சில நாட்களில் என்னை விட்டு நித்திரையில் மூழ்குகிறாள், இது போதா குறைக்கு மூக்குக்கு முக்கால் இன்ச் கீழே மதுபான கடைவேறு நடத்தி வருகிறாள் தோழி.