இடுகைகள்

siddarth லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நட்பதிகாரம்

படம்
இயந்திரவியல் துறையில் இணைந்த காலத்தில் இன்னது செய்வதெனத்   தெரியாமல் கழிந்தன நாட்கள். கல்லூரி பாதையில் கால்கள் சென்ற போதிலும் காரணம் தெரியாமல் காலங்கள் காலமாகிப் போனது. இயந்திர ரயிலின் கடைசி பெட்டியில் இணைக்கப்பட்ட இருபத்தெட்டின் இரண்டாம் மூன்றில் என் பெரயரும் இருந்தது. நட்பென நால்வருடன் நல்கிய போதிலும் நான் தேடிக் கண்டது என்னை , என்னைப் போல் நின்னை. அங்கொரு மூலையில் கதவுகள் திறக்கும் காற்றோசையின் பின்னால் கருநிற கண்ணன் ஒருவன் காத்திருந்தான் – என்னுள் கலக்கக் கதைத்திருந்தான். எனக்குப் பின்னால் அமர்ந்து எர்ணாகுலம்   வந்தாய் என எந்நாளும் சொல்லி வியக்கும் எம் எண்ண மொழிகள் அங்கொரு மூளையில் சாரை எறும்புகள் சீனி தேடி ஒரு யாத்திரை சென்றன யாத்திரை யாமத்தில் யானும் சேர்ந்தேன் யாத்திரை கொண்டேன் நின்னை அடைந்தேன் பின் கண்ட காட்சி எல்லாம் கவிக்கத்   தான் வேண்டுமோ? சாகா வரம் தந்து சகாப்த நட்பிற்கு வித்திட்டாய் இது போல் சாட இனி இல்லை நின்போல் ஒரு சாமானியன் யானும் அஃதே     நாம் கொண்ட நட்பும் நாவிட்ட நளபா