இடுகைகள்

கவிதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நவரஸா

படம்
  கருவில் உதித்து உரு கண்ட என் சிசுவின் பொக்கை வாய் நகையும் அசௌகரிய அழைப்பின் அழுகையும் உதிரம் மிகுந்த இளிவரலும் அது கொணர்ந்த உவகையும் மாந்தர் மகிழ்வின் மனம் புரியா மருட்கையும் அள்ளி அணைக்கும் அன்புகள் உணரா அச்சமும் -பின் அன்பின் இனம் கண்ட பெருமிதமும் அண்டத்தில் அணைத்தோர் வசம் செல்லும் வெகுளியும் பின் சோர்ந்து துயிலும் அமைதியும் அகிலம் ஆளவிருக்கும் என் ஈஸ்வரியின் நவரசங்கள்            

நவீன சந்தை மீதான தமிழ் சிந்தை

படம்
  சாமானியனிடத்தில்  சந்தைப்படுத்த  சுவரொட்டி மட்டும்  போதவில்லை இன்று  அழகாபுரத்து சாலையில்  பவனிவரும் அழகியெல்லாம்  சொகுசுகாரில் விரலுக்கு  சொடுக்கெடுத்து விட்டு  விரல் தேய  தொடுதிரையில்  தொலைந்து போகின்றார்கள்  இவர்களின்  மனம் கவர மணமுவந்த  மரக்காகித  கூழும்  மக்கிப்போய்  மண் சேர்கின்றன  இனி என்ன  இவர்களுக்கு இணைய உலகத்தில்  உலா வரும்  இளசுகளை  இனம் அறிந்து  மனம் கவர  சந்தை  இதிகாசங்கள்  இணையத்துடன்  இணைந்துவிட்டன  தட்டும் விரல்களை  தாவிக் கொண்டு  தபக்கென குதிக்கும்  தரவரிசை முடிவுகளுக்குள் தடகள ஆட்டமே  நடக்குது இங்கே  சந்தை பொருளை  விந்தை செய்து  சிந்தை சேர்த்து  சில்லறை சேர்க்க சமூக ஊடகம்  சேவை செய்யுது  மிகைப்படுத்தி  முன்வைக்கப்பட்ட  மின்னஞ்சல்கள் சில முக்கோண பணிக்கூழை  முன்வைத்து மூக்கொழுகளை  முன் நிருத்தி  கைக்குட்டையையும்  கைதுருத்தி போகுது  ஆயிரம் ஆயிரம்  அச்சு எழுத்துகளை  அழகாய் கோர்த்து  மொழிகளில் மெருகேற்றி  வழியெல்லாம் விழிக்கோர்  விருந்து சமைகின்றன  இத்துனை செய்யும்  இணைய வணிகமும்  நவீன சந்தையும்  நவநாகரிக மாந்தரின்  நாடித்துடிப்பின்  கரம் பற்றியே  அறம் செய்கின்றன 

அகரமும் ககரமும்

படம்
  அன்பும் கருணையுமாய்  அறிவும் காதலுமாய்  அழகும் காந்தமுமாய் ஆகாசமும் காற்றுமாய்  அலகும் கனவுமாய்  அறமும் கடமையுமாய்  அகரமும் காகிதமுமாய்  அணிகலனும் கழுத்துமாய்  ஆடவனும் கன்னியுமாய்  அவனும் காதலியும்   காலத்தில்.

மிதிப்போம் மிதிவண்டி

படம்
  காலச்சக்கரம் சுழல்கிறது புதியதொரு விடியலை காண பழையனவென கழித்ததெல்லாம் பகட்டாய் நம் வாழ்வியலில் படர்ந்தோடுகிறது மீண்டும், மீண்டும் மீண்டும்.   அதில் இன்று மின்சார பொறிபோல் அகம் கொண்டது இந்த மிதிவண்டி.   காலச்சக்கரம் தம் பாதையை பின்னோக்கி   மிதிக்கிறது சற்றே மதிக்கிறது   கண நேரத்தில் கடந்து சென்ற சொகுசு வாகன சுகவாசிகளையும் சற்று வியர்வை குளியலில் நனைத்திருக்கிறது மிதிவண்டி   புல்லட்டு ஏறி பூவனம் சுற்றிய புன்னகை அரசர்களையும் பொற்பாதம் கொண்டு மிதிவாங்கி கொண்டது மிதிவண்டி   எரிபொருள் ஏற்றதில் சிற்றம் கொண்ட சிறார் சிலரை   சிந்திக்க செய்து     சிந்தை சக்கரத்தின் பாதையை சற்று தன் வசம் திருப்பி உள்ளது மிதிவண்டி   இனி சாலைகளில் சில சுழற்சிகள் புதுமையில் சுழலவிருக்கின்றன   ஒய்யாரமாய் ஓய்வெடுத்த ஓவிய பாதங்களும் ஒழுகவிருக்கின்றன வேர்வை கசிவில், கசியட்டும் சில காலம்     கருத்துடனே   காலங்கள் எம் கண்மணிகளுக்கும் கண்ணின் மணிகளுக்கும் காதலை தந்து போகட்டும் கால்களுக்கும் கட்டைகளுக்

வீர வாழ்க்கை

படம்
  அண்டத்தில் பிண்டங்கள் பிருதிவி கொணர்ந்து கொட்டுவதெல்லாம் எதற்காக ? கூடி குலாவி குழவி தந்து கூடு சேர்த்து காடுகள் செல்ல மட்டுமோ ? அல்ல அல்ல   இன்று பிறக்கும் பிருதிவி கொண்ட பிண்டதிற்கெல்லாம் அண்டத்தில் ஓர் அகராதியே இருக்கிறது.   அது தன்னை அறிதலாம். தையல் வையத்தில் வனம் சேர்ந்த நாள் தொட்டு அவர் தொட்ட உச்சங்கள் சொச்சமல்ல, சொச்சமல்ல.   மண் தொட்டு மகிழ்வுற்று மரபாச்சியில் மனமுற்று பின் பூப்பெய்தி புடவை கட்டி பொட்டு வைத்து சமிக்கைகளில் சொல்லிவைத்து வரன் பார்த்து உயிர் சேர்த்து உயிர் தந்து போவதற்கல்ல இந்த வாழ்க்கை   மாறாய் பள்ளி சென்று பட்டம் பெற்று பதவி கொண்டு பட்சியாய் பறந்து பட்டறிவு பல பெற்று பார் சுற்றி பார்வை தரும் கோணக் குறிப்பறிந்து கபால ஓட்டினுள்ள கருவி தரும் கருத்தின்  வழி காதல் செய்து மீண்டுமோர் நீட்சியாய் நின் நிலத்திற்கோர் வீர விதையிட்டு தன்னை அறிந்து தளரும் வயதிலும் விதைகளை விருட் சமாக்குதல் வீர வாழ்க்கை.

மதிப்பிற்குரிய மணமகளுக்கு

படம்
ஒரு பூ  புலம்பெயர்கிறது புன்னகையுடன்  தன் குளத்திற்கு வளம் சேர்க்க,  புலம் பெயர்ந்த பின்னும்  வளம் சேர்க்கும் பூவோ இது ? ஆம் , புலம் பெயர்ந்தாலும்  நற்குளம் கண்டு  குலை தந்து  குணம் காத்து  குணவதியாய்  புகழ் சேர்க்கும் பூவிது. பூவினை நேசிக்கும் காதலன்  பூலோகத்தில் உண்டல்லோ ? இதில் என்ன விந்தை , இங்கு காதலனை நேசிக்க  பூக்களே பூத்து புலம் பெயர ஆவல்  கொண்டுள்ளபோது  ? விந்தையில்லை விந்தையில்லை. பூவே , புலம் பெயரும்  குளம் நினக்கு ஓர் பெருங்களம். பெருமை கொள்வாய், அவ்வண்ணமே   பொறுமையும் கொள்வாய்.  குளம் நின்னை  கொணர்தவனை மட்டும்  கொண்டு முடியவில்லை  அது அழகாய்  அவன் வழி கண்ட  ஆலமார விழுதுகளையும்  அடக்கியுள்ளது . விழுதுகள் உனக்கு  விகராமாய் தோன்றலாம்  விண்ணோக்கி நின் புருவம் உயர்த்தலாம்  ஆயினும் அவர்களும் ஒரு  விதை தந்த விழுதுகளே, நின் குணத்தால்  நித்தமும் பூத்து  புகழ் சேர்ப்பாய்  பூவியில். மனம்கொண்டவன் –நின்  மாதவன்  மனம் பிறழ்ந்து  மொழி பகிர்ந்தாலும்  மனம் கோனாது-நீன்  மைய்யலில் மைய்யம் கொண்டிருப்பாய். பூவே இன்னுமும்  சொல்வேன் கேளாய் , இந்த பூ புவியில் பூத்தது புலம் பெயரவும்  மனம் பகிரவும்

எஞ்சாமி

படம்
அமுதமும் அலுவலும் அன்னையும்  அய்யனும்  கொண்டவளும் அவள்பால் உண்டவளும் இயற்கையும் அதில் இசைந்த இசையும் செடியும் கொடியும் அது கொண்ட ஆடும் மாடும் அண்டமும் பிண்டமும் அருவமும் உருவமும் கனவும் கல்வியும் கலவியும் காமமும் காதலும் சாதலும் கள்வனும் கண்ணனும் தனமும் தானியமும் காசும் கருத்தளமும் தலைவனும் தலைவியும் தரணி வாழ் மாந்தர்கள் மைய்யல் கொள்ளும் எம் மொழி தமிழும் கடவுள்கள் எனக் கொண்டாடும் அகிலத்தில் அன்பையும்   அறிவையும் அண்டத்தாரை ஆளும் ஆண்டவனாய் கொள்வது எம் சிந்தைபோக்கு .

மாந்தரின் மாந்தர்கள்

படம்
உயிர் உய்ய ஊண் மருவி  உடல் சேரும் உறவுகளே மருந்தென்போம் –   அவ் உறவுகளின்    உருத்தரிந்து உயிர்நாள்   உய்விக்கும் உலகத்தின் நாயகர்கள் இவர்கள் பிணி பல   பிணைந்திடினும் பிரியமுடன்   முன் வந்து பிணி நீக்கி வினை செய்யும் விந்தையர்   நம் மருத்துவர்கள் பிண்டமாய் பிறப்பெடுக்கும் பிறவிகளை பிரசவம் செய்து பிருதிவி கொணரும் பிரியர்கள் நம் செவிலியர்கள் ஞாலத்தில் ஞாபகம் கொண்ட நாள் முதலும் கண்டதில்லை   இப் பெருநோயை கொள்ளை நோய் கண்டாலும் கலங்காது களப்பணி கண்டு வரும் கருணைமிகு காவலாளிகள்   நம் கலைஞர்கள் ஆம் கலைஞர்கள்தான். சினை கண்ட   தாய்க்கெல்லாம் சிதையாது சிலை வார்க்கும் சிந்தை கொண்ட மாந்தர்களை கலைஞரென கதைக்காமல்   வேறென்ன கதைப்பது ? கதைப்போம்   இக் களப்பணி வீரர்களையும் கலைஞர் என்றே நாவினிலே   நளபாகத்தின் நாட்டியத்தை மீட்டெடுப்போரை. வாழ்த்தியும் வணங்கியும்.