இடுகைகள்

love லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாதரை போற்றுவோம்

படம்
உதிரத் துளிகள்  உலகிற்கு  உவகையை  தந்த வண்ணம்  உள ; செவி  தொடும்  மழலை சொற்கள்  குழலையும்  யாழையும்  ஏறிட்டு  பார்க்க வைப்பதில்  பாரபட்சம் பார்ப்பதில்லை ; உயிர் கலக்கும்  மெய் உரசல் எல்லாம்  உயிர்மெய்யை  எல்லா காலத்திலும்  தந்து செல்வதில்லை ; அது அப்படி ஆகி போதலும்  அமைத்தவன் செயலே,  அதை உணராது  மாதர் மனம் நோக  மாமொழி வசைகள்  எதற்கு ? புவி சேரா  பிண்டத்தை  பிழையென சூட்டும்  பிதற்றல்கள் வேண்டா . மழலை கொள்ளா  மாந்தரும் மாந்தரேயென  மாநெறி காத்தல் - நம்  மாண்பிற்கு அழகு  மாதரை போற்றுவோம் சில நேரத்திலேனும்  அவர் தம்  மனங்களையும் .    

கிழவனுக்கு வேற வேல இல்ல

படம்
படம் பார்த்து பட்டாடை உடுத்தி  பன்மாலை மாற்றி  திருக்கல்யாணம் செய்து  முகம் பார்த்து  முத்தமிட்டு  முனங்கள் செய்து முன்னோர் வழி  முத்துகள் பெற்று, முனைப்பாய் வளர்த்து  குலம் காக்க  கூடு சேர்த்து, கூரை பாயின்  குறுக்கே அமர்ந்து  குலப்பெருமை பேசும்  என்னவளின்  கன்னத்தில் விழும் எச்சில் துளி  ஒரு மொழி பேசி செல்லும்   “கிழவனுக்கு வேற வேல இல்ல” என்ற  அந்த  வாஞ்சை வார்த்தையில்  வளரும் அந்த காதல்