நவரஸா

 



கருவில் உதித்து

உரு கண்ட

என் சிசுவின்

பொக்கை வாய்

நகையும்

அசௌகரிய அழைப்பின்

அழுகையும்

உதிரம் மிகுந்த

இளிவரலும்

அது கொணர்ந்த

உவகையும்

மாந்தர் மகிழ்வின்

மனம் புரியா

மருட்கையும்

அள்ளி அணைக்கும்

அன்புகள் உணரா

அச்சமும்-பின்

அன்பின் இனம்

கண்ட பெருமிதமும்

அண்டத்தில்

அணைத்தோர்

வசம் செல்லும்

வெகுளியும்

பின்

சோர்ந்து

துயிலும்

அமைதியும்

அகிலம்

ஆளவிருக்கும்

என் ஈஸ்வரியின்

நவரசங்கள்

 

 

 

 

 

 

கருத்துகள்

அதிகம் சுவைத்தவை

சௌசாலயம்

பெண் மயிலின் தோகைகள்

அவர் தான் பெரியார்