தந்தையின் குட்டி இளவரசி


ஒற்றை நிறப்புரி
ஒன்றாய் கலந்து 
ஒய்யார சிங்காரி 
உதித்து விட்டாள் 
உலகநாயகனுக்கு.

ஒற்றை  நிறப்புரி
ஒன்றாய் கலந்து 
ஒய்யார சிங்காரி 
உதித்து விட்டதலாலே 
அவன் 
உலகநாயகனாகி போனான். 

அழகிய அச்சில்  
உயிர் ஊற்றி 
வார்த்தமையால்
பேரழகி ஒருவள் 
பேரண்டத்தில் 
கூடிக் கலக்க 
கூடிவிட்டாள்.


பரந்த மார்பில் 
பாதை  செய்து 
பார்த்திருந்த
அவனுக்கு 
சின்னசிறு பாதம்
கொண்டு 
எட்டி வைத்து 
நடை பழக 
நங்கை அவள் 
தோன்றிவிட்டாள்.

ஜனத்தின் நாயகி 
ஜானகி வந்து 
ஜடைபின்ன கடவாலென 
ஜடாமுடி தரித்து 
ஜெபம் செய்து 
காத்திருந்தான் .


இனி சிலகாலம் 
ஜடை பின்னி 
பூ சூடி 
போட்டு வைத்து 
மையிட்டு
அழகு பார்த்து 
கிடப்பாள்
அவன் 
உலகாளும் 
உலகநாயகி . 



 

கருத்துகள்

அதிகம் சுவைத்தவை

சௌசாலயம்

பெண் மயிலின் தோகைகள்

அவர் தான் பெரியார்