இடுகைகள்

கடவுள் காட்சி

படம்
கடவுள் எனக்கு  காட்சி கொடுத்தார் அநீதி என்னை  அச்சுறுத்தும் போதும் மடமைகள் என்னை  சுட்டு எரிக்கும் போதும் சினம் என்னை  சீரழிக்கும் போதும் கவலை என்னை கதிகலங்க செய்யும் போதும் சன்னல் வழியே வேடிக்கை  பார்த்தே  கடவுள் எனக்கு காட்சி கொடுத்தார்

மாதரை போற்றுவோம்

படம்
உதிரத் துளிகள்  உலகிற்கு  உவகையை  தந்த வண்ணம்  உள ; செவி  தொடும்  மழலை சொற்கள்  குழலையும்  யாழையும்  ஏறிட்டு  பார்க்க வைப்பதில்  பாரபட்சம் பார்ப்பதில்லை ; உயிர் கலக்கும்  மெய் உரசல் எல்லாம்  உயிர்மெய்யை  எல்லா காலத்திலும்  தந்து செல்வதில்லை ; அது அப்படி ஆகி போதலும்  அமைத்தவன் செயலே,  அதை உணராது  மாதர் மனம் நோக  மாமொழி வசைகள்  எதற்கு ? புவி சேரா  பிண்டத்தை  பிழையென சூட்டும்  பிதற்றல்கள் வேண்டா . மழலை கொள்ளா  மாந்தரும் மாந்தரேயென  மாநெறி காத்தல் - நம்  மாண்பிற்கு அழகு  மாதரை போற்றுவோம் சில நேரத்திலேனும்  அவர் தம்  மனங்களையும் .    

சொக்காய் சௌகரியங்கள்

படம்
பொக்கை வாய் கிழிசல்கள் பொத்தானை துருத்தி கொண்டு மெய் பொருந்தி நிற்பதால்  சொக்காயில் சில சௌகரியங்கள்

தந்தையின் குட்டி இளவரசி

படம்
ஒற்றை நிறப்புரி ஒன்றாய் கலந்து  ஒய்யார சிங்காரி  உதித்து விட்டாள்  உலகநாயகனுக்கு. ஒற்றை  நிறப்புரி ஒன்றாய் கலந்து  ஒய்யார சிங்காரி  உதித்து விட்டதலாலே  அவன்  உலகநாயகனாகி போனான்.  அழகிய அச்சில்   உயிர் ஊற்றி  வார்த்தமையால் பேரழகி ஒருவள்  பேரண்டத்தில்  கூடிக் கலக்க  கூடிவிட்டாள். பரந்த மார்பில்  பாதை  செய்து  பார்த்திருந்த அவனுக்கு  சின்னசிறு பாதம் கொண்டு  எட்டி வைத்து  நடை பழக  நங்கை அவள்  தோன்றிவிட்டாள். ஜனத்தின் நாயகி  ஜானகி வந்து  ஜடைபின்ன கடவாலென  ஜடாமுடி தரித்து  ஜெபம் செய்து  காத்திருந்தான் . இனி சிலகாலம்  ஜடை பின்னி  பூ சூடி  போட்டு வைத்து  மையிட்டு அழகு பார்த்து  கிடப்பாள் அவன்  உலகாளும்  உலகநாயகி .   

தாடிக்காரர்

படம்
ஆண் சாதி பெண் சாதி பிற சாதி சமாதி என சமத்துவம் சமைத்து சமூக நீதி காத்து கவைக்கு உதவா காரியங்கள் கருத்தில் தள்ளி நற்சிந்தை செய்து தையலெல்லாம் தொழில் செய்து தனம் பெற தளம் செய்த தாடிக்காரர் இவர்

புதிய பாதை

படம்
சக்கர சுழற்சியின்  சலிப்புகள்  எல்லாம்  கிளர்ந்து எழுந்து  தளர்கின்றன  தூசி துடைத்து  வண்ணம் பூசி  பூசை செய்து  புத்துயிர் கொண்டு  புது சரித்திரம்காண  புதிய பாதைகள்  பயணம் போகுது  இருமொழி புலமையில்  வாஞ்சை கொஞ்சம்  வசமாகி போனதனால்  வாழ்வு சிறக்குமென ஓர்  வசந்தகால பயணம்  பாதை காணுது  கருவிகள் கொண்டு  கருமங்கள் செய்தால்  காலத்தால் கனி  கனியும் என கனித்தோர் வாக்கில்  கருவிகள் பிடித்து  கருமங்கள் செய்திட  கால்களின் பயணம்  கனியும் கனியும்  கண்களை கவரும்  கருத்தும் சிறக்கும்  விரல்கள் தொடுக்கும்  வில்லின் அம்பினை  மாலையாக்கும்  மார்க்கம் ஊடே  இணையம் சிலிர்க்கும்  இனிமை பிறகும் 

பேரன்பின் பதிப்பு

படம்
தந்தை என்னும் ஆணின் பேரன்பில் மைய்யம் கொண்டு மகவாய் வரும் மகளெல்லாம் அந்த ஆணின் பெண் பதிப்புகளே.