இடுகைகள்

சௌசாலயம்

படம்
  நலம் வேண்டி வலம் சுற்றி திருத்தலம் போற்றி நளபாகம் ருசித்து நைய்ய புடைத்து நாவிரல் நக்கி பக்தியில் மூழ்கி முழங்கால் நனைத்து நாமம் ஜபித்து நமஸ்கரிப்பதில் மட்டும் கிட்டுவதில்லை சில வாழ்வியல் வளங்கள்   மாறாய் வள்ளுவன் வாக்கில் வணங்கி சோறை குடித்து நீரை புசித்தலே நீடித்த வாழ்விற்கு வளம் சேர்க்கும் வழிகளாம்.   கூடுதலாய் குடல் சேர்க்கும் குப்பைகளை கூட்டி வரி மலம் வார்க்கும் மார்கமெல்லாம் மாக்கோயிலே மாந்தர்க்கு.   தமிழ்குடி தட்டும் தளங்கள் எல்லாம் திருத்தலம் காணும் கருத்துடனே   உடல் சேரா உபரிகள் நீக்கி உயிர் உய்ய உரம் சேர்த்து உளவு செய்ய ஓர் களம் செய்வோம் ; குடல் கொள்ளா குளம் நீக்க மனை கொள்ளும் சௌசாலயங்கள் சுகம் காக்கும் சூத்திரங்கள் ;   ஆலயம் செய்வோம் சௌசாலயம்   செய்வோம் மனைகளில் கொள்வோம் இதை நம் மனதிலும் கொள்வோம் ;

மகளை பெறும் மகராசன்

படம்
மனங்கொண்டவள் மணமேடை கண்டபோதே  மாகளிம்பும் மனதில் குடிகொண்டது  குடைகூலி குடுக்காமலே ;  குலவிக்காக கலவி செய்து  காத்திருந்த கனமெல்லாம் காதலியின் கதைப்புகள் தன்   கரு கொண்ட திரு ஒற்றியே ; கண்ணனோ ? அவள் காதலியோ ? என  காத்திருப்புகள்  புதிர்கொள்ள செய்தன. மனங்கொண்ட மகராணி  மாதவனை தன் வசம் அழைத்து  வம்சத்தின் வசம் சேர  வயிறு கொண்டது  வள்ளுவனோ ? வாசுகியோ ? என மொழி வினாவினாள் ; ஓவியனோ  வரையோலையை  வசம் இழுத்து வாசம் பிடித்து  உச்சி முகர்ந்து உள்ளம் குளிர்ந்து  வரையோலை வயிறு கொண்டது  வாசுகின் வரவிற்கென  வாஞ்சை கொண்டான். காகிதத்தில் தமிழ்  கருத்தளங்கள்  கொணர்ந்து கொட்டும் கவிஞனே, வாசுகியின் வசம் வாஞ்சை கொண்டு  வரம் தரும் என்  வள்ளுவனே,  ஆண் மகவு கொள்ளும்  ஆவல் கொள்ளாது  தையலை உனக்கே  உரித்தாகும்  விந்தை கூறு. என் சிறந்தவளே, தோழியே, நின் தசையில் ஓடி  வித்தில் கலந்து  விண் செல்லும்  வினை செய்யோள் வரம் தேடும்  விந்தை சொல்வேன்  கேளாய்  நின் வரவை  நித்தம் நித்தம் தம் சிந்தையிற்கொண்டு  கர்வம் கொண்ட  உந்தையின்  உளறல்  கேட்டிருப்பாயோ ? மகவென  மகளை கொண்டு  அமுதூட்டி  அன்பு செய்து  ஆர்பரித்து  உயிர் உலாவி 

மதிப்பிற்குரிய மணமகளுக்கு

படம்
ஒரு பூ  புலம்பெயர்கிறது புன்னகையுடன்  தன் குளத்திற்கு வளம் சேர்க்க,  புலம் பெயர்ந்த பின்னும்  வளம் சேர்க்கும் பூவோ இது ? ஆம் , புலம் பெயர்ந்தாலும்  நற்குளம் கண்டு  குலை தந்து  குணம் காத்து  குணவதியாய்  புகழ் சேர்க்கும் பூவிது. பூவினை நேசிக்கும் காதலன்  பூலோகத்தில் உண்டல்லோ ? இதில் என்ன விந்தை , இங்கு காதலனை நேசிக்க  பூக்களே பூத்து புலம் பெயர ஆவல்  கொண்டுள்ளபோது  ? விந்தையில்லை விந்தையில்லை. பூவே , புலம் பெயரும்  குளம் நினக்கு ஓர் பெருங்களம். பெருமை கொள்வாய், அவ்வண்ணமே   பொறுமையும் கொள்வாய்.  குளம் நின்னை  கொணர்தவனை மட்டும்  கொண்டு முடியவில்லை  அது அழகாய்  அவன் வழி கண்ட  ஆலமார விழுதுகளையும்  அடக்கியுள்ளது . விழுதுகள் உனக்கு  விகராமாய் தோன்றலாம்  விண்ணோக்கி நின் புருவம் உயர்த்தலாம்  ஆயினும் அவர்களும் ஒரு  விதை தந்த விழுதுகளே, நின் குணத்தால்  நித்தமும் பூத்து  புகழ் சேர்ப்பாய்  பூவியில். மனம்கொண்டவன் –நின்  மாதவன்  மனம் பிறழ்ந்து  மொழி பகிர்ந்தாலும்  மனம் கோனாது-நீன்  மைய்யலில் மைய்யம் கொண்டிருப்பாய். பூவே இன்னுமும்  சொல்வேன் கேளாய் , இந்த பூ புவியில் பூத்தது புலம் பெயரவும்  மனம் பகிரவும்

எஞ்சாமி

படம்
அமுதமும் அலுவலும் அன்னையும்  அய்யனும்  கொண்டவளும் அவள்பால் உண்டவளும் இயற்கையும் அதில் இசைந்த இசையும் செடியும் கொடியும் அது கொண்ட ஆடும் மாடும் அண்டமும் பிண்டமும் அருவமும் உருவமும் கனவும் கல்வியும் கலவியும் காமமும் காதலும் சாதலும் கள்வனும் கண்ணனும் தனமும் தானியமும் காசும் கருத்தளமும் தலைவனும் தலைவியும் தரணி வாழ் மாந்தர்கள் மைய்யல் கொள்ளும் எம் மொழி தமிழும் கடவுள்கள் எனக் கொண்டாடும் அகிலத்தில் அன்பையும்   அறிவையும் அண்டத்தாரை ஆளும் ஆண்டவனாய் கொள்வது எம் சிந்தைபோக்கு .

நட்பின் நாட்டியங்கள்

படம்
அயலானாய் அகர கூடத்தில் அமர்ந்திருந்தேன் இது நானோ   ? இல்லை இதிகாச பிதற்றலோ ? என மன இல்லமெல்லாம் சிந்தை பின்னல்கள்- பின் இல்லை என தெளிவுற்று இனியவரை இனம் காண இனித்தேன் ;   கண்டேன் கன்னி ஒருத்தியை கவி பாரதியின் கன்னியோ இவள் என என்னுள் கதைத்தும் கொண்டேன் , காலங்கள் கலாய்ப்பாய் கரைதல் கண்டு யானும் கலைந்து கலாய்த்தோர் வசம் கலந்தேன்   தாடிக்காரன் சீண்டல்கள் சில நேரம் சீற்றம் கொள்ள செய்தாலும் –அவன்   நற் சிந்தை கொண்டு இணங்கி பிணைந்திருதேன்   அச்சிந்தை சில அன்பர்களை நண்பர்களாய் இனம் கண்டு தந்தது.   இப்படியும் மாந்தர் இருப்பரோ மாநிலத்தில் என நினனக்கும் பொறுத்து அவர்தம் வினைகள் விந்தயாகியது.   நட்பிற்கும் கலங்கும் கண்ணன், பாசத்தில் பீச்சிடும் பச்சிளங் குழந்தை, குளிருக்கு மூட்டிய தீ போல் குறும்புகளால் மனம் கொண்ட மாந்தன், சிரிப்பில் தன் குறிப்பெழுத சிலிர்த்த சினை கண்ட சிங்காரி, ஊண் சோற்றிற்கு உமிழ் நீர் சுரக்கும் சுந்தரி , லொள் என்ற நாய் குறைப்பின் ஞொயத்தில் தாய் விளிக்கும் தமிழ் தந்த ஆங்கில மொழி     திருத்

புகைப்படங்கள்

படம்
காலத்தை கரைக்காமல் கதை சொல்லும் கலைஞன் காண ஒலியிலும் கானம் சேர்க்கும் கலைஞனின் கருப்பொருள் காணென காட்டி களிப்பு தரும் கண்ணாடி புகைப்படங்கள்

மாந்தரின் மாந்தர்கள்

படம்
உயிர் உய்ய ஊண் மருவி  உடல் சேரும் உறவுகளே மருந்தென்போம் –   அவ் உறவுகளின்    உருத்தரிந்து உயிர்நாள்   உய்விக்கும் உலகத்தின் நாயகர்கள் இவர்கள் பிணி பல   பிணைந்திடினும் பிரியமுடன்   முன் வந்து பிணி நீக்கி வினை செய்யும் விந்தையர்   நம் மருத்துவர்கள் பிண்டமாய் பிறப்பெடுக்கும் பிறவிகளை பிரசவம் செய்து பிருதிவி கொணரும் பிரியர்கள் நம் செவிலியர்கள் ஞாலத்தில் ஞாபகம் கொண்ட நாள் முதலும் கண்டதில்லை   இப் பெருநோயை கொள்ளை நோய் கண்டாலும் கலங்காது களப்பணி கண்டு வரும் கருணைமிகு காவலாளிகள்   நம் கலைஞர்கள் ஆம் கலைஞர்கள்தான். சினை கண்ட   தாய்க்கெல்லாம் சிதையாது சிலை வார்க்கும் சிந்தை கொண்ட மாந்தர்களை கலைஞரென கதைக்காமல்   வேறென்ன கதைப்பது ? கதைப்போம்   இக் களப்பணி வீரர்களையும் கலைஞர் என்றே நாவினிலே   நளபாகத்தின் நாட்டியத்தை மீட்டெடுப்போரை. வாழ்த்தியும் வணங்கியும்.