மதிப்பிற்குரிய மணமகளுக்கு



ஒரு பூ 
புலம்பெயர்கிறது
புன்னகையுடன் 
தன் குளத்திற்கு
வளம் சேர்க்க, 
புலம் பெயர்ந்த பின்னும் 
வளம் சேர்க்கும் பூவோ இது ?
ஆம் , புலம் பெயர்ந்தாலும் 
நற்குளம் கண்டு 
குலை தந்து 
குணம் காத்து 
குணவதியாய் 
புகழ் சேர்க்கும் பூவிது.

பூவினை நேசிக்கும் காதலன் 
பூலோகத்தில் உண்டல்லோ ?
இதில் என்ன விந்தை ,
இங்கு காதலனை நேசிக்க 
பூக்களே பூத்து
புலம் பெயர ஆவல் 
கொண்டுள்ளபோது  ?
விந்தையில்லை
விந்தையில்லை.


பூவே ,
புலம் பெயரும் 
குளம் நினக்கு ஓர்
பெருங்களம்.
பெருமை கொள்வாய், அவ்வண்ணமே  
பொறுமையும் கொள்வாய். 

குளம் நின்னை 
கொணர்தவனை மட்டும் 
கொண்டு முடியவில்லை 
அது அழகாய் 
அவன் வழி கண்ட 
ஆலமார விழுதுகளையும் 
அடக்கியுள்ளது .

விழுதுகள் உனக்கு 
விகராமாய் தோன்றலாம் 
விண்ணோக்கி நின் புருவம் உயர்த்தலாம் 
ஆயினும் அவர்களும் ஒரு 
விதை தந்த விழுதுகளே,
நின் குணத்தால் 
நித்தமும் பூத்து 
புகழ் சேர்ப்பாய் 
பூவியில்.

மனம்கொண்டவன் –நின் 
மாதவன் 
மனம் பிறழ்ந்து 
மொழி பகிர்ந்தாலும் 
மனம் கோனாது-நீன் 
மைய்யலில் மைய்யம்
கொண்டிருப்பாய்.

பூவே இன்னுமும் 
சொல்வேன் கேளாய் ,
இந்த பூ புவியில்
பூத்தது புலம் பெயரவும் 
மனம் பகிரவும் மட்டுமல்ல 

மகரந்த சேர்கையிலும்  
மனம் கொண்டு 
மண்ணிற்கோர் 
மகள் தந்து
தமிழ் தருவாய்.

தமிழ் தந்த நின்னை 
யாம் வேறென்ன 
கேட்க ,
தமிழிலே வீரம் ,
தனம் ,காதல் ,
களவு ,கல்வி,
கலவி, சுவை, 
களஞ்சியம், கருத்தளம் 
என யாவும் 
உளதே 
போதும் பூவே 
இனி 
ஆதியில்  புலர்வாய்  
அந்தியில் நின் ஆதவன் 
தோல் கொள்வாய் 
தளர்வாய்.

கருத்துகள்

அதிகம் சுவைத்தவை

சௌசாலயம்

பெண் மயிலின் தோகைகள்

அவர் தான் பெரியார்