இடுகைகள்

எண்ணம் போல் வாழ்க்கை

படம்
கபால ஓட்டின் கருவி வழியே காந்தமாய் கொள்ளும் சிந்தைகள் யாவும் சீறிப் பாய்ந்து சிதையாது கொள்ளாது சினை தரித்து செயல் காணும் மாண்பே எண்ணம் போல் வாழ்க்கை

வாசிப்பின் வாசல்கள்

படம்
அண்டத்தில் உள்ள  அனைத்து ஜீவராசிகளுக்கும் அவ்வளவு எளிதில் கிடைக்காத அன்னையின் பாசத்தை  ஆணை சாவாரியை  இனிப்பின் சுவையை  ஈக்களின் ஒலியை உள்ளத்தின் உணர்வை ஊடலின் இன்பத்தை எச்சில் சுவையை ஏறு தழுவுதலை  ஐந்துக்கள் கொஞ்சலை ஒப்பாரி ஓலத்தை ஓலைபாயின் ஒண்டு குடித்தனத்தை ஔபாசனப் புகையை ஃகின் மொழி வளத்தை சில  வாசிப்பின்  வாசல்கள் அனைத்தையும்  அகம் சேர்த்து  அழகு பார்க்கின்றன

அகரமும் ககரமும்

படம்
  அன்பும் கருணையுமாய்  அறிவும் காதலுமாய்  அழகும் காந்தமுமாய் ஆகாசமும் காற்றுமாய்  அலகும் கனவுமாய்  அறமும் கடமையுமாய்  அகரமும் காகிதமுமாய்  அணிகலனும் கழுத்துமாய்  ஆடவனும் கன்னியுமாய்  அவனும் காதலியும்   காலத்தில்.

மிதிப்போம் மிதிவண்டி

படம்
  காலச்சக்கரம் சுழல்கிறது புதியதொரு விடியலை காண பழையனவென கழித்ததெல்லாம் பகட்டாய் நம் வாழ்வியலில் படர்ந்தோடுகிறது மீண்டும், மீண்டும் மீண்டும்.   அதில் இன்று மின்சார பொறிபோல் அகம் கொண்டது இந்த மிதிவண்டி.   காலச்சக்கரம் தம் பாதையை பின்னோக்கி   மிதிக்கிறது சற்றே மதிக்கிறது   கண நேரத்தில் கடந்து சென்ற சொகுசு வாகன சுகவாசிகளையும் சற்று வியர்வை குளியலில் நனைத்திருக்கிறது மிதிவண்டி   புல்லட்டு ஏறி பூவனம் சுற்றிய புன்னகை அரசர்களையும் பொற்பாதம் கொண்டு மிதிவாங்கி கொண்டது மிதிவண்டி   எரிபொருள் ஏற்றதில் சிற்றம் கொண்ட சிறார் சிலரை   சிந்திக்க செய்து     சிந்தை சக்கரத்தின் பாதையை சற்று தன் வசம் திருப்பி உள்ளது மிதிவண்டி   இனி சாலைகளில் சில சுழற்சிகள் புதுமையில் சுழலவிருக்கின்றன   ஒய்யாரமாய் ஓய்வெடுத்த ஓவிய பாதங்களும் ஒழுகவிருக்கின்றன வேர்வை கசிவில், கசியட்டும் சில காலம்     கருத்துடனே   காலங்கள் எம் கண்மணிகளுக்கும் கண்ணின் மணிகளுக்கும் காதலை தந்து போகட்டும் கால்களுக்கும் கட்டைகளுக்

கடவுள் குட்டு

படம்
பெண்னே மாநிலத்தில் மகிழ்ச்சியாய்  சுற்றி திரியும் உன்னை  அழைத்து அன்பு செய்து ஆரத் தழுவி ஆர்ப்பரித்து கபால கருத்தளம் வழி கலக்க செய்து காதல் செய்து மாநிலத்தில் மீண்டும் மய்யல் கொள்ள மகவு தந்து போவென பிறப்பின் நோக்கதை நின் சிரசில் கொட்டி சொன்ன  கடவுள் செயலோ உதிரப்போக்கு

வீர வாழ்க்கை

படம்
  அண்டத்தில் பிண்டங்கள் பிருதிவி கொணர்ந்து கொட்டுவதெல்லாம் எதற்காக ? கூடி குலாவி குழவி தந்து கூடு சேர்த்து காடுகள் செல்ல மட்டுமோ ? அல்ல அல்ல   இன்று பிறக்கும் பிருதிவி கொண்ட பிண்டதிற்கெல்லாம் அண்டத்தில் ஓர் அகராதியே இருக்கிறது.   அது தன்னை அறிதலாம். தையல் வையத்தில் வனம் சேர்ந்த நாள் தொட்டு அவர் தொட்ட உச்சங்கள் சொச்சமல்ல, சொச்சமல்ல.   மண் தொட்டு மகிழ்வுற்று மரபாச்சியில் மனமுற்று பின் பூப்பெய்தி புடவை கட்டி பொட்டு வைத்து சமிக்கைகளில் சொல்லிவைத்து வரன் பார்த்து உயிர் சேர்த்து உயிர் தந்து போவதற்கல்ல இந்த வாழ்க்கை   மாறாய் பள்ளி சென்று பட்டம் பெற்று பதவி கொண்டு பட்சியாய் பறந்து பட்டறிவு பல பெற்று பார் சுற்றி பார்வை தரும் கோணக் குறிப்பறிந்து கபால ஓட்டினுள்ள கருவி தரும் கருத்தின்  வழி காதல் செய்து மீண்டுமோர் நீட்சியாய் நின் நிலத்திற்கோர் வீர விதையிட்டு தன்னை அறிந்து தளரும் வயதிலும் விதைகளை விருட் சமாக்குதல் வீர வாழ்க்கை.

கிழவனுக்கு வேற வேல இல்ல

படம்
படம் பார்த்து பட்டாடை உடுத்தி  பன்மாலை மாற்றி  திருக்கல்யாணம் செய்து  முகம் பார்த்து  முத்தமிட்டு  முனங்கள் செய்து முன்னோர் வழி  முத்துகள் பெற்று, முனைப்பாய் வளர்த்து  குலம் காக்க  கூடு சேர்த்து, கூரை பாயின்  குறுக்கே அமர்ந்து  குலப்பெருமை பேசும்  என்னவளின்  கன்னத்தில் விழும் எச்சில் துளி  ஒரு மொழி பேசி செல்லும்   “கிழவனுக்கு வேற வேல இல்ல” என்ற  அந்த  வாஞ்சை வார்த்தையில்  வளரும் அந்த காதல்