இடுகைகள்

புகைப்படங்கள்

படம்
காலத்தை கரைக்காமல் கதை சொல்லும் கலைஞன் காண ஒலியிலும் கானம் சேர்க்கும் கலைஞனின் கருப்பொருள் காணென காட்டி களிப்பு தரும் கண்ணாடி புகைப்படங்கள்

மாந்தரின் மாந்தர்கள்

படம்
உயிர் உய்ய ஊண் மருவி  உடல் சேரும் உறவுகளே மருந்தென்போம் –   அவ் உறவுகளின்    உருத்தரிந்து உயிர்நாள்   உய்விக்கும் உலகத்தின் நாயகர்கள் இவர்கள் பிணி பல   பிணைந்திடினும் பிரியமுடன்   முன் வந்து பிணி நீக்கி வினை செய்யும் விந்தையர்   நம் மருத்துவர்கள் பிண்டமாய் பிறப்பெடுக்கும் பிறவிகளை பிரசவம் செய்து பிருதிவி கொணரும் பிரியர்கள் நம் செவிலியர்கள் ஞாலத்தில் ஞாபகம் கொண்ட நாள் முதலும் கண்டதில்லை   இப் பெருநோயை கொள்ளை நோய் கண்டாலும் கலங்காது களப்பணி கண்டு வரும் கருணைமிகு காவலாளிகள்   நம் கலைஞர்கள் ஆம் கலைஞர்கள்தான். சினை கண்ட   தாய்க்கெல்லாம் சிதையாது சிலை வார்க்கும் சிந்தை கொண்ட மாந்தர்களை கலைஞரென கதைக்காமல்   வேறென்ன கதைப்பது ? கதைப்போம்   இக் களப்பணி வீரர்களையும் கலைஞர் என்றே நாவினிலே   நளபாகத்தின் நாட்டியத்தை மீட்டெடுப்போரை. வாழ்த்தியும் வணங்கியும்.   

பெண் மயிலின் தோகைகள்

படம்
அன்றொருநாளில் அழகிய வானில் அலைந்த மயில்கள் அண்டதில் இடம் தேடி என் அருகில் அமர்ந்தன பிடாரி மையிரை பிடித்தது போலே பின்னங் கழுத்தை பிசைந்து கொண்டு பின் அடி கண்டது வீசிய காற்றின் விகாரம் கொண்டு விண்ணோக்கி ஓர் வினை செய்தது தோரணம் தொடுத்த தோரணை கொண்டு இறக்கை விரிக்க ஓர் இடம் கண்டு கொண்டது அருகில் இருந்த அழகின் ஆணையில் உடலை உலுக்கி ஓர் உவகை தந்தது தொண்டையின் ஓசையில்   தொடங்கி கொண்டையில் சிலிர்ப்பில் பல தோகைகள் தோரணம் கொண்டது அச்சிறு பொழுதில் என் மனம் மையம் கொண்டதெல்லாம்   பெண் மயிலின்   பேராண்மையில் தான் இயற்கையின் இசைவில் தோகைகள் துறத்து தோரணம் மறந்தாலும் சோர்வுறாது சினை கொண்டு சிறகடிக்கும் ஆண்மயில் ஈன்று இறுமாப்புடன்   திரியும் பெண்மையிலே ! நின் வினை நிலத்தினில் பெரிது வாழ்க நீ மன மகிழ்வோடும்- ஆண் மயிலோடும்.

நட்பதிகாரம்

படம்
இயந்திரவியல் துறையில் இணைந்த காலத்தில் இன்னது செய்வதெனத்   தெரியாமல் கழிந்தன நாட்கள். கல்லூரி பாதையில் கால்கள் சென்ற போதிலும் காரணம் தெரியாமல் காலங்கள் காலமாகிப் போனது. இயந்திர ரயிலின் கடைசி பெட்டியில் இணைக்கப்பட்ட இருபத்தெட்டின் இரண்டாம் மூன்றில் என் பெரயரும் இருந்தது. நட்பென நால்வருடன் நல்கிய போதிலும் நான் தேடிக் கண்டது என்னை , என்னைப் போல் நின்னை. அங்கொரு மூலையில் கதவுகள் திறக்கும் காற்றோசையின் பின்னால் கருநிற கண்ணன் ஒருவன் காத்திருந்தான் – என்னுள் கலக்கக் கதைத்திருந்தான். எனக்குப் பின்னால் அமர்ந்து எர்ணாகுலம்   வந்தாய் என எந்நாளும் சொல்லி வியக்கும் எம் எண்ண மொழிகள் அங்கொரு மூளையில் சாரை எறும்புகள் சீனி தேடி ஒரு யாத்திரை சென்றன யாத்திரை யாமத்தில் யானும் சேர்ந்தேன் யாத்திரை கொண்டேன் நின்னை அடைந்தேன் பின் கண்ட காட்சி எல்லாம் கவிக்கத்   தான் வேண்டுமோ? சாகா வரம் தந்து சகாப்த நட்பிற்கு வித்திட்டாய் இது போல் சாட இனி இல்லை நின்போல் ஒரு சாமானியன் யானும் அஃதே     நாம் கொண்ட நட்பும் நாவிட்ட நளபா

கோடை மழை

படம்
பைந்தமிழ் புலவன் பாட்டினிற் வார்த்த சூரரைப் போற்று சொல்வதைப் போல வெய்யோன் சில்லிகள் வேர்க்க  வைக்கின்றன பொடி நடை கண்ட பொற்தமிழரெல்லாம் மனை தங்கியே வினை செய்து  வருகின்றார்கள் வானம் பார்க்கும் மாந்தரெல்லாம் மன்றாடுவது ஒரு மாரிக்கு தானே தோகை விரித்து தோரணையாய் சிலிர்க்கும் ஆண் மயில் ஆட்டம் காண அணைத்துலகியரும் ஆங்கங்கே ஆதவனிடம் விண்ணப்பம் கோர்கிறார்கள் கொட்டிவிடு மாதவா கோடை மழையாய் -நின் கொடை மனம் கொண்டு -யாம் குதித்து குத்தாட்டம் போட எஞ்சிரு பாதம் கொண்டு....

அவர் தான் பெரியார்

படம்
மானமிழந்த மக்களையும் சிந்தை பொருத்தி சிரசுயர செய்த சீர்திருத்தவாதி பெரியார் ஆரிய மண்ணின் வீரியம் அறுத்து திராவிடம் காத்த தலைவர்  பெரியார் ஜாதி களங்கம் களைத்து  கலப்பு மணங்கள் அமைத்து - ஓர்யுக களம் கண்டவர்  பெரியார் சிகை நகை கண்டு மயங்கிய மகளிருக்கும் மானம் புகுத்தி பட்டபடிப்பும் அதற்கோர் பணியும் பெறுதல் நலம் என விடுதலை விதைத்தவர் பெரியார் சாஸ்திரமும் சம்பிரதாயமும் அகத்தின் ஆக்கபூர்வ சக்தியின் முட்டுக்கட்டையன மூடநம்பிக்கை முடங்க  செய்தவர் பெரியார் அகரம் அளித்த அறிவு கொண்டே அணைத்தையும் பகுத்துணர்வோம் திராவிட வழியினுடே தேசியம் காப்போம்

வாழ்வின் நோக்கம்

படம்
நாதம்  நிறைந்து வித்தாய் ஊற்றெடுக்கும் பிறப்பில் இருபத்தி மூன்றாம்   நிறப்புரி  இணைவில் ஈருடல் ஓருயிராய் தரித்து உதிரத்தை உணவாய் கொண்டே உரம் பெற்று உலகறிய வான் பறந்து கலப்பை  சுமந்தே காடு சென்று கதிர் அறுக்கும் கலைஞர்கள் நாம். களை அறுத்தலும் வினை திருத்தலும் ஞால பயனெனக் கொள்க காலம் செல்ல காதல் கொள்ளக் கலவி செய்யக் கண்கள் கொள்வோம் கருத்துடனே, உயிர் உய்ய, ஊண் கொள்ள, ஊண் சமைப்போம் உலகத்திற்கே- ஓர் கவளம் காதலுடன்